Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Monday, March 14, 2011

இருமைவாதமும் தமிழ் சமூகமும்

தமிழ் நாட்டில் மட்டுமே உண்மை இரண்டு உண்மைகளாக இருக்கிறது. ஒரு தொலைக்காட்சியில் மக்கள் பேரின்பத்தில் இருக்கிறார்கள் மற்றொரு தொலைக்காட்சியில் மக்கள் பெரும் துன்பத்தில் உழல்கிறார்கள்.
மேனாள் அமெரிக்க அரசு தலைவர் சார்சு புசு சொன்னதைப் போல "நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எதிரியுடன் இருப்பதாகத் தான் அர்த்தம்" என்று அச்சுறுத்துகின்றன நடு நிலை என்ற ஒன்று இல்லவே இல்லை என்று அறை கூவல் விடுகின்றன.
ஆனால் உண்மையான உண்மை என்பது இந்த இரண்டிற்கும் நடுவில் தான் இருக்கிறது
தமிழ் சமூகமே இருமை வாதத்தின் பிடியில் சிக்கி இருக்கிறது.இருமை வாதம் என்றவுடன் நன்மை தீமை என்ற இரண்டுக்குமான போராட்டம் என்ற அளவில் நினைத்து விடக் கூடாது அது இரண்டுமே தீமை என்ற அளவில் கெட்டஇருமைகள் ஆக இருக்கின்றன. முதலில் ஒரு அமைப்பு தொடங்கப் படுகிறது பின்னர் அது மெள்ள தீமையை நோக்கி பயணிக்கிறது அந்த தீமைக்கு மாற்றாக நன்மை என்ற பெயருடன் மற்றொரு அமைப்பு வருகிறது பின்னர் அதுவே தீமையை நோக்கி சென்று இன்னொரு மையப் புள்ளியாக மாறத் தொடங்குகிறது.அந்த மையப் புள்ளியிலிருந்து மீண்டும் பல சிதைவுகள் எனத் தொடர்கிறது.இந்த வாதம் திரைத்துறை, அரசியல் மட்டுமல்லாமல் இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. இந்த இருமைகளைத் தாண்டி மற்றவற்றின் இருப்பிற்கு அர்த்தங்கள் ஏதுமில்லை. இதன் பட்டியல் நமக்கு ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் சேர்த்தே அளிக்கிறது.

தி.மு.க X அ.தி.மு.க
ம.ம.க X இ.யு மு.லீ
மு.மு.க X இன்னொரு மு.மு.க
வி.சி.க X இ .கு.க
பு.த X த.மு.க
கொ.மு.க X கொ.இ.பே.
அ.இ .ச ம.க X பெ.ம.க

திரைப்படத்துறை.
எம்.ஜி.ஆர் X சிவாஜி
ரஜினி X கமல்
அஜித் X விஜய்
சூர்யா X விக்ரம்.
சிம்பு X தனுஷ்

இதழ்கள்
குமுதம் X ஆனந்த விகடன்.
இலக்கியம்
காலச்சுவடு X உயிர்ம்மை
சாரூ நிவேதிதா X ஜெயமோகன்.
தொலைக் காட்சி
கலைஞர் X ஜெயா
இப்படிப் பட்டியல் நீள்கிறது நேர் எதிர் என்று இல்லாமல் இரண்டுமே தீமைகளாகி வெகு நாட்களாகிறது.