Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Wednesday, March 16, 2011

ஜெயலலிதா வைகோவை ஒதுக்குவதன் உண்மையான காரணம்.

ஜெயலலிதா வைகோவை ஒதுக்குவதன் உண்மையான காரணம் எதிர்காலத்தில் நிச்சயம் வைகோ தனக்கு போட்டியாக வருவார் என்ற அச்சத்தின் காரணமாகத்தான். இது நிச்சயம் நகைப்புக்குரியதாக தோன்றலாம் ஆனால் உண்மை மறுக்க முடியாத உண்மை. கொஞ்சம் தர்க்க ரீதியாக சிந்தித்தால் இதன் நீண்ட கால சதித் திட்டம் புலப்படும். தமிழக அரசியலை தொடர்ந்து அவதானித்தால் ஒரு சில கட்சிகள் விஷய புகழ் பெற்று முன்னுக்கு வந்தது பின்னர் காணாமல் போனது. த.மா.கா அந்த வகையில் குறிப்பிடத் தக்க கட்சி அது போல எந்த விதமான தெளிந்த அரசியல் சிந்தனைகளும் அற்ற விசயகாந்தின் கட்சியும் கொ.மு.க போன்ற கட்சிகளும் இதில் அடங்கும்.
இப்படி ஒரு சூழ்நிலையை சிந்தித்தால்
கலைஞரின் மறைவுக்குப் பின் எந்த வித தலைமையும் சரியாக அமையாமல் தி.மு.க சிதைவடையத் தொடங்குகிறது. அதில் உள்ள பெருந்தலைகள் எல்லோரும் வைகோவின் பின்னால் அணி வகுக்கத் தொடங்குகிறார்கள். இந்த இடத்தில் தி.முக வை வைகோ கைப்பற்றுகிறார் பின்னர் அவருக்குப் போட்டி நிச்சயம் வைகோ தான்.

காங்கிரசோ நிச்சயம் அந்த இடத்தை நிரப்ப முடியாது ஏனெனில் தமிழக மக்களைப் பொறுத்த அளவில் தலைவர் என்பவர் உள்ளூரில் இருக்க வேண்டும் திராவிட கட்சியாக இருக்க வேண்டும்.
விசயகாந்தும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை உருவாக்கும் அளவுக்கு தலைமைப் பண்பு இல்லை அவருக்கு வாக்களித்த பலரிடம் கேட்டறிந்த வகையில் இரண்டு பெரிய கட்சி கூட்டணிகளையும் பிடிக்காதவர்கள் இவருக்கு வாக்களித்தார்கள். ஒரு கூட்டணியில் சேர்ந்ததால் இவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகி விட்டார்.
இரண்டே இரண்டு காரணங்கள் மட்டும் தான் இறுதியாக தெரிகிறது.
1. நீண்ட கால காரணம் கலைஞருக்குப் பின் பெரிய தலைவராக உருவெடுக்கும் வாய்ப்பு
2 குறுகிய காலத்தில் ஒரு எழுபது தொகுதிகள் வென்றால் காங்கிரஸ் ஒரு ஐம்பது அல்லது நாப்பதில் வென்றால் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்று ஒரு மறைமுகத்திட்டம் வைத்துள்ளாரோ என்று ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை









Tuesday, February 8, 2011

அ.தி.மு.க வில் சேர்ந்தார் வைகோ ?

திரு வைகோ அவர்கள் நாகையில் உண்ணா நிலை போராட்டம் நடத்திய போது மேடையில் கீழ் காணும் படம் வைக்கப்பட்டுள்ளது
அதாவது பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதாவிற்கு அடுத்து வைகோ
இந்தப் படம் சொல்லும் சேதி என்ன திரு வைகோ அவர்களே ? முழு சரணாகதிக்கு தயார் ஆகிவிட்டீர்கள் என்பது புலனாகிறது. இதற்கு பேசாமால் கட்சியை கலைத்து விட்டு அ.தி.மு. க விலேயே சேர்ந்து விடலாம். இதெல்லாம் ஒரு பிழைப்பா ? உங்களை நம்பி இருக்கும் கொஞ்ச நஞ்சம் தொண்டர்களையும் முட்டாளாக்காமல் ஆவது இருங்கள் புரட்(டு)சி புயல் அவர்களே..!


Monday, January 10, 2011

ஓட்டுப் பொறுக்கி ஆகியே விட்டார் சீமான்!!

you too seeman?
வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு பரப்புரை செய்யப் போவதாக அறிவித்துள்ளார் சீமான்.இறுதியாக "செந்தமிழன்" சீமான் போயஸ் தோட்டத்தின் காலடியில் சரணடைந்து வீழ்ந்து விட்டார். உனக்கு எதுக்கையா தமிழ் தேசிய அரசியல் எல்லாம் ? வெங்காயம்.
விரைவில் கலைஞரிடம் இருந்து இவ்வாறு அறிக்கை வரலாம்
"தமிழ் தேசியத்துக்கென தயாரிக்கப்பட்ட துவக்கு இன்று ஊழல் அராஜக மாளிகையின் படிக்கட்டில் துருப் பிடித்து கிடக்கிறது"
ஈழத்தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார் தந்தை செல்வா. ஆனால் தமிழ் நாட்டுத்தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போல் தெரிகிறது. அய்யகோ !!!

தொப்பி தொப்பியே (துப்பி துப்பியே) பதில் சொல்லுங்கள்?

பதிவுலகில் திருட்டு டீவீடீ யை ஆதரிக்கும் தேசிய மயக்கம் கொண்ட தொப்பி தொப்பி என்பவரின் சீமானே பதில் சொல்லுங்கள் என்ற பதிவிற்கான எதிர்வினை தான் இது. முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள் நண்பரே.
  1. சீமானைப் பற்றி எழுதுவதற்காக யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள்?
  2. சீமானைப் பற்றி உடன் பிறப்புகள்,பொதுவுடமையாளர்கள் எழுதிய பதிவுகளை இலவச இணைப்பாக தருவது ஏன்? நீங்கள் தி மு கவினரின் கைக்கூலியா ?
  3. இந்திய தேசியம் என்பது என்ன ?
  4. கருநாடகாவில் தமிழர் கன்னடர் ஒற்றுமை கோடி கட்டிப் பறக்கிறதா ? சொல்லவே இல்ல. மொதல்ல கர்நாடகாவுல வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு அப்பறம் சொல்லுங்கய்யா ஒற்றுமையப்பத்தி. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை நிறுத்துக மேலும் கன்னடர் தமிழர் ஒற்றுமை பற்றி அறிய http://churumuri.wordpress.com/2007/05/09/churumuri-poll-who-killed-bangalore/
  5. சென்ற பாராளுமன்ற தேர்தலில் சீமான் பரப்புரை செய்த இடங்களில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியதே அதற்கு உங்கள் கருத்து துப்பல் ?
  6. இந்தி தேசிய மொழி, united states of india என்று வரலாறும் தெரியாமல் புவியியலும் தெரியாமல் உளறுவது ஏன் ? ப்ளாக் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காகவா ?
  7. வட இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை காதலிக்கிறார்கள் என்று உளறுவது ஏன் ? (இந்த விவகாரம் நடந்தது கருநாடக மாநிலம் மங்களூர் மற்றும் கனர பகுதிகள் இதன் உண்மை தன்மை பற்றி வினவில் கட்டுரை வந்ததே (http://www.vinavu.com/2010/02/02/love-jihad/) இணைப்பு ஏன் தரவில்லை வினவில் இருந்து தனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை வசதியாக மறந்து விடுவது என்ன selective amnesia வா ?
  8. எங்களது ஒற்றுமையைப் பதம் பாத்து தான் நீ அரசியல் லாபமும் பணமும் பெறவேண்டும் என நினைத்தால் அதற்கு என் நாட்டைப் பயன் படுத்த அனுமதிக்க மாட்டேன் --துப்பி துப்பி ( பெயர் காரணத்தை பின்பு விளக்குகிறேன் ) என்ன ஒரு தத்துவ முத்து (துப்பல்) பாருங்கள் நம்ம கிட்ட என்ன ஒற்றுமை வாழுதுன்னு கொஞ்சம் விளக்க முடியுமா ? காவிரி, முல்லைப் பெரியாறு இதெல்லாம் இந்தியாவில் தான் இருக்கிறதே அதே இந்தியாவில் இருக்கும் தமிழ் நாட்டிற்கு ஏன் தண்ணீர் வரவில்லை ? இது பற்றி சிந்திக்க உங்கள் தொப்பி போட்ட மண்டயில் மசாலா இல்லையா அல்லது உங்களது மூளைக்கும் சேர்த்து தொப்பி போட்டுக் கொண்டுள்ளீர்களா ?
  9. தமிழனை அங்கே அடிக்கிறான் இங்கே அடிக்கிறான் என்கிறாயே ? ஏன் தமிழன் என்பதற்காகவா அடித்தான் ? இது இவரின் இன்னொரு தத்துவ முத்து-- பின்ன எதுக்கய்யா அடிக்கிறான் ? கொஞ்சம் விளக்க முடியுமா ?
  10. சினிமா என்பதே ஆபாசம் என்று கூறும் அறிவு ஜீவியான நீங்கள் அதை திருட்டு டீவீடீ இல் பார்க்குமாறு வேண்டுவது ஏன் ? அப்படி அந்த ஆபாசக் குப்பைகளை பார்த்தால் மட்டும் எப்படி குடும்பம் முன்னேறும் அது மேலும் மேலும் சீரழிவைக் கொண்டுவந்து தானே நிறுத்தும் ?
  11. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தான் சிறையில் தான் தள்ளப் படுவேன் என்று சீமான் கூறி உள்ளாரே அதைப் பற்றி ஏன் கள்ள மௌனம் ?
  12. அயல் நாட்டில் உள்ள தீவிரவாத கும்பலிடம் பணம் வாங்கி கொண்டு சீமான் பேசுவதாக சொல்லும் நீங்கள் அந்த தீவிரவாத கும்பலின் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா ?
  13. தமிழர்களை இந்தியாவிற்கு எதிராக மாற்றித்தான் சீமான் அரசியல் செய்ய வேண்டுமா ? நல்ல இருக்கு கதை தமிழன் எப்போ எதிரா போனான் அந்த இந்தியா தானே தமிழனுக்கு எதிரா இருக்கு அத தானே சீமான் சொல்கிறார்
  14. உங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பம்மிக் கொண்டு பதிவு வசை பாடுவது ஏன் ?
  15. இறுதியாக "நமது" உறவு பலப்பட என்று ஒரு இணைப்பைக் கொடுத்துள்ளீர்களே அந்த நமது என்பது யார் ? உடன் பிறப்பு கும்பலா ?

இந்த கேள்விகளுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்

இறுதியாக பெயர்க்காரணம் இவர் இந்த நபர் சீமான் மீது வசைமாரி பொழிவதாக நினைத்துக் கொண்டு இவர் மல்லாந்து படுத்துக் கொண்டு துப்பிக் கொண்டிருக்கிறார் எனவே இவரின் பெயர் துப்பி துப்பி என்று குறிப்பிடுகிறேன்

கருத்துக்களை திறந்த மனதோடு வரவேற்கிறேன் !!

Sunday, December 26, 2010

சன் டி.வி "வீர" பாண்டியனின் சண்டித் தனம்

சன் நியூஸ் தொலைக் காட்சியில் நேற்று இரவு ஏதேச்சையாக வீரபாண்டியனின் நேருக்கு நேர் நிகச்சியை காணும் பேறு?? கிடைத்தது.
பேட்டி காணப்பட்டவர் ம.தி.மு.க வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய (வெளியேற்றப் பட்ட ?) "கலைப் புலி" தாணு (பேட்டி எடுக்கற அளவுக்கு என்னத்த கிழிச்சார்னு தெரியல ) அதில் வீரபாண்டியன் கேட்ட ஒரு கேள்வி ம.தி.மு.கவில் இருந்து தொடர்ந்து எல்லோரும் வெளியேறி வருகிறார்களே ஏன் ? கட்சியில் தனக்கு சமமான அறிவார்ந்தவர்களின் இருப்பு வைகோ விற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதா ? என்ன ஒரு அயோக்கியத்தனமான கேள்வி இது. வெளியேறியவர்கள் அனைவரும் வைகோ விற்கு சமமான "அறிவாற்றல்" பெற்றவர்களா ? அப்படியானால் அவர்களே தலைவர்களாக இருந்திருக்க வேண்டுமே ? இதையே தி.மு.க வில் இருந்து வெளியேறுகிரவர்களிடமும் கேட்பீர்களா மிஸ்டர் "வீர" பாண்டியன் ? வாங்குன காசுக்கு நல்லா தான்யா கூவர