Saturday, February 19, 2011

நகரத்தில் வாழ்பவர்கள் மட்டுமே மனிதர்கள் facebook அராஜகம்..!

நீங்கள் மனிதர்களாக இருக்க வேண்டுமா facebook இல் கட்டாயம் உறுப்பினராக இருந்தாக வேண்டும் என்ற நிலைக்கு சமூகம் சென்று கொண்டிருக்கிறது. பலர் இதற்க்கு அடிமையாகி விட்டனர்.இன்றைய வாழ்வின் தவிர்க்கவியலாத அளவு சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இருக்கிறது வெறும் சமூக வலைத்தளம் என்ற அளவில் இருந்து facebook எனும் முகநூல் பன்முக பயன்பாடுகளை கொண்டதாக இருக்கிறது. ஆனால் இந்தத் தளம் தன்னளவில் பன்முகத்தன்மையை மறுக்கிறது அதவாது உங்களது சொந்த ஊர் என்ற இடத்தில் நீங்கள் உங்களது சிற்றூரின் (கிராமத்தின்) பெயரை டைப் செய்ய முடியாது அதில் ஏற்கனவே உள்ளீடு செய்யப் பட்டுள்ள ஒரு பட்டியலில் இருந்தே அதை தெரிவு செய்ய முடியும்.

இந்த இடத்தில் அது home town என்று மட்டுமே இருக்கிறது. நீங்கள் ஒரு சிற்றூரை சேர்ந்தவராக இருந்தால் அதை இதில் குறிப்பிட முடியாது.அதாவது நகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமே மனிதர்கள் என்று சொல்கிறது எனத் தோன்றுகிறது. முக நூலின் இந்த அடையாள மறுப்பையும் பாசிச போக்கையும் கண்டிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.உங்களுக்கு ?

Tuesday, February 8, 2011

அ.தி.மு.க வில் சேர்ந்தார் வைகோ ?

திரு வைகோ அவர்கள் நாகையில் உண்ணா நிலை போராட்டம் நடத்திய போது மேடையில் கீழ் காணும் படம் வைக்கப்பட்டுள்ளது
அதாவது பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதாவிற்கு அடுத்து வைகோ
இந்தப் படம் சொல்லும் சேதி என்ன திரு வைகோ அவர்களே ? முழு சரணாகதிக்கு தயார் ஆகிவிட்டீர்கள் என்பது புலனாகிறது. இதற்கு பேசாமால் கட்சியை கலைத்து விட்டு அ.தி.மு. க விலேயே சேர்ந்து விடலாம். இதெல்லாம் ஒரு பிழைப்பா ? உங்களை நம்பி இருக்கும் கொஞ்ச நஞ்சம் தொண்டர்களையும் முட்டாளாக்காமல் ஆவது இருங்கள் புரட்(டு)சி புயல் அவர்களே..!