Showing posts with label தே.மு.தி.க. Show all posts
Showing posts with label தே.மு.தி.க. Show all posts

Wednesday, March 16, 2011

ஜெயலலிதா வைகோவை ஒதுக்குவதன் உண்மையான காரணம்.

ஜெயலலிதா வைகோவை ஒதுக்குவதன் உண்மையான காரணம் எதிர்காலத்தில் நிச்சயம் வைகோ தனக்கு போட்டியாக வருவார் என்ற அச்சத்தின் காரணமாகத்தான். இது நிச்சயம் நகைப்புக்குரியதாக தோன்றலாம் ஆனால் உண்மை மறுக்க முடியாத உண்மை. கொஞ்சம் தர்க்க ரீதியாக சிந்தித்தால் இதன் நீண்ட கால சதித் திட்டம் புலப்படும். தமிழக அரசியலை தொடர்ந்து அவதானித்தால் ஒரு சில கட்சிகள் விஷய புகழ் பெற்று முன்னுக்கு வந்தது பின்னர் காணாமல் போனது. த.மா.கா அந்த வகையில் குறிப்பிடத் தக்க கட்சி அது போல எந்த விதமான தெளிந்த அரசியல் சிந்தனைகளும் அற்ற விசயகாந்தின் கட்சியும் கொ.மு.க போன்ற கட்சிகளும் இதில் அடங்கும்.
இப்படி ஒரு சூழ்நிலையை சிந்தித்தால்
கலைஞரின் மறைவுக்குப் பின் எந்த வித தலைமையும் சரியாக அமையாமல் தி.மு.க சிதைவடையத் தொடங்குகிறது. அதில் உள்ள பெருந்தலைகள் எல்லோரும் வைகோவின் பின்னால் அணி வகுக்கத் தொடங்குகிறார்கள். இந்த இடத்தில் தி.முக வை வைகோ கைப்பற்றுகிறார் பின்னர் அவருக்குப் போட்டி நிச்சயம் வைகோ தான்.

காங்கிரசோ நிச்சயம் அந்த இடத்தை நிரப்ப முடியாது ஏனெனில் தமிழக மக்களைப் பொறுத்த அளவில் தலைவர் என்பவர் உள்ளூரில் இருக்க வேண்டும் திராவிட கட்சியாக இருக்க வேண்டும்.
விசயகாந்தும் எதிர்காலத்தில் பெரிய தாக்கத்தை உருவாக்கும் அளவுக்கு தலைமைப் பண்பு இல்லை அவருக்கு வாக்களித்த பலரிடம் கேட்டறிந்த வகையில் இரண்டு பெரிய கட்சி கூட்டணிகளையும் பிடிக்காதவர்கள் இவருக்கு வாக்களித்தார்கள். ஒரு கூட்டணியில் சேர்ந்ததால் இவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகி விட்டார்.
இரண்டே இரண்டு காரணங்கள் மட்டும் தான் இறுதியாக தெரிகிறது.
1. நீண்ட கால காரணம் கலைஞருக்குப் பின் பெரிய தலைவராக உருவெடுக்கும் வாய்ப்பு
2 குறுகிய காலத்தில் ஒரு எழுபது தொகுதிகள் வென்றால் காங்கிரஸ் ஒரு ஐம்பது அல்லது நாப்பதில் வென்றால் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்று ஒரு மறைமுகத்திட்டம் வைத்துள்ளாரோ என்று ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை