Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Tuesday, May 3, 2011

தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!.... வைகோ



தென் சூடானுக்குப் பிறகு தமிழ் ஈழம் தான்!

பொங்கித் தீர்த்த வைகோ....!

சிங்கள ராணுவத்தின் பிடியில் இருந்து, வழக்கறிஞர் கயல் என்ற
அங்கயற்​கண்ணியை மீட்டதற்காக, உயர் நீதிமன்ற தமிழ் இலக்கியப் பேரவை, கடந்த 26-ம் தேதி வைகோவுக்கு நன்றி பாராட்டும் விழா நடத்தியது. வழக்கறிஞர்கள் அறிவழகன், இராம.சிவசங்கர், காசிநாதபாரதி ஆகியோர் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்திற்கு, கட்சிகளைக் கடந்து 2,000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ''பிரதமரை சந்திக்க என்னையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார் வைகோ. அது அவசரப் பயணம். குறிப்பிட்ட நேரத்துக்குள் பிரதமர் இல்லம் போய்விட முடியுமா? எனத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வந்தார். பெற்ற மகளைப் பறிகொடுத்தது போலப் பதைபதைத்தார். பிரதமரை வைகோ சந்தித்த பிறகு, இலங்கை அரசுக்கு நமது வெளியுறவுத் துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுத்தனர். அதற்குப் பிறகுதான், அங்கயற்கண்ணி விடுவிக்கப்பட்டார்...'' என விவரித்தார்.


அடுத்துப் பேசினார் அங்கயற்கண்ணி... ''எங்​களைக் கைது செய்ததுமே, வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்போவதாக மிரட்டி வந்தார்​கள் இலங்கை அதிகாரிகள். திடீரென அவர்கள் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அன்றுதான் இங்கே, பிரதமரை வைகோ சந்தித்து இருக்கிறார்!'' என்று நெகிழ்ந்தார்.

இறுதியாக மைக் பிடித்தார் வைகோ. ''எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை தமிழர்களின் நலனுக்காகப் பயன்படுத்துவேன். வழக்கறிஞர் அங்கயற்கண்ணி, சிங்கள ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார் என்ற செய்தி கேள்விப்​பட்டபோது, நான் தஞ்சாவூருக்கு காரில் சென்று​கொண்டு இருந்தேன். உடனே, பிரதமருக்கு போனில் தகவல் தெரிவித்தேன். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அன்றுதான் நான் அவரிடம் பேசினேன். காங்கிரஸ் கட்சியின் பிரதமராக எனக்கு அவரைப் பிடிக்காது. மன்மோகன்சிங் என்ற தனி மனிதராகப் பிடிக்கும். 'சிங்கள ராணுவம் பிடித்துவைத்து இருப்பது பாவலர் பெருஞ்சித்திரனார் என்ற தமிழ்ப் புலவரின் பேத்தியை. உடனே, அவர் விடுவிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், இதற்கான பின் விளைவுகளை மத்திய அரசு சந்தித்தே தீர வேண்டும். இது தொடர்பாக நான் உங்களை சந்திக்க வேண்டும். முடிந்தால், நேரம் ஒதுக்குங்கள்’ என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டேன். சிறிது நேரத்தில், 'மறுநாளே சந்திக்க வரலாம்...’ என, பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது. எனது ஆதங்கத்தை அவரிடம் நேரில் கொட்டினேன். உடனே நடவடிக்கை எடுத்தார்.


இதே மன்றத்தில்தான் ஈழத்தில் நடப்பது என்ன? என்று நான் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இலங்கையில் நடந்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என ஐ.நா. குழு இன்று கூறியுள்ளது. ராஜபக்ஷேவும் அவரது கூட்டமும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

நெஞ்சைப் பிழியவைக்கும் தகவல் ஒன்றை நான் கேள்விப்பட்டேன். ஈழத்தில் போர் நடந்தபோது, ஒரு வீட்டுக்​குள் புகுந்த சிங்கள ராணுவத்​தினர், அங்கிருந்த வயதான தாயையும் கற்பழித்துள்ளனர். பூப்பெய்தி சில நாட்களே ஆன 13 வயது சிறுமியையும் விடவில்லை. இதற்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. 25 லட்சம் அப்​பாவி​கள் பலியான தெற்கு சூடான் ஜூலை 1-ம் தேதி சுதந்திர தேசமாக, புதிய விடியலுடன் உதயமாகிறது. இந்த விடியல் ஈழத்திலும் நிகழும்.


ஈழப் போர் இன்னும் முடியவில்லை. அதை இயக்குவதற்கு தாய்த் தமிழகம் தயாராக இருக்க வேண்டும். மாவீரன் பிரபாகரன் தோன்ற வேண்டிய நேரத்தில் தோன்றி படையை வழி நடத்துவார். இந்த இயக்கம் இருக்கும் வரை... என் உயிர் ஓயும் வரை.. நான் பிறந்த இந்த மண்ணுக்கும், தமிழர்களுக்கும் என்னால் முடிந்த சேவைகளை செய்துகொண்டே இருப்பேன்...'' என்று சீறினார் வைகோ!

நன்றி: ஜூனியர் விகடன்

Sunday, May 1, 2011

ஈழம்: கொடூரமும் கொலையும்

ழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்​கிறது ஐ.நா. நிபுணர் குழு. நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே...


நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்​தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்!

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை

நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும் பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர். ஆனால், இந்த வெற்றிக்காக இலங்கை ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள், பல தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. போரில் புலிகள் வட கிழக்குக் கடலோரப் பகுதியான வன்னிக்குத் தள்ளப்பட்டதால், லட்சக்கணக்கான தமிழர்கள் எங்கேயும் தப்பிச் செல்ல முடியாதபடி, வலிமையான இரண்டு போர்க் குழுக்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்டனர். இதனால்தான், உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதலால், முதியவர்களும், பெண்களும் குழந்தைகளும் தாக்குண்டு சிதறினார்கள். மறுபுறம் ராணுவத்துக்கு எதிராகப் புலிகள் நடத்திய தாக்குதலிலும் தமிழ் மக்கள் சிக்கிக்கொண்டனர். போர்ச் சூழலில் மனிதாபிமான உதவிகளை வழங்க​வேண்டிய இலங்கை அரசு, பாதிக்கப்பட்ட மக்களை அடக்குவதிலேயே குறியாக இருந்ததுதான் பெரும் ​துயரம்!

கடைசிக் கட்டத் தாக்குதல் உக்கிரமாக நடந்தது. அதனால், அந்த இடத்தில் இருந்து எந்தத் தகவலையும் அறிய முடியவில்லை. 'என்ன நடந்தது?’ என்கிற புதிர் விலகும் முன்னரே, அதிபர் ராஜபக்ஷே 2009 மே 19-ம் தேதி, போரின் வெற்றியை அறிவித்தார். அதனால், இறுதிக் கட்டத் தாக்குதலின் கடுமையும், பாதிப்புகளும் உலகுக்குத் தெரியாமலே போய்விட்டது. போர் முடிந்த சில நாட்களுக்குப் பின்னர், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கைக்குப் போனார். போர் நடந்த சில இடங்களையும், சில முகாம்களையும் பார்வை இட்டார். அதன் தொடர்ச்சியாக, நிபுணர் குழு அமைக்கப்​பட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தொடக்கத்​தில் தங்கள் பலத்தைப் பெருக்கிக்கொள்வதில் அதிக அக்கறை காட்டினர். இதற்காக குடும்பத்துக்கு ஒருவர் என்ற விகிதத்தில், தங்கள் அமைப்பில் ஆட்களை சேர்த்துக்​கொண்டனர். போரின் தீவிரத்தால் ஒரே குடும்பத்தில் இருந்து பலரையும் தங்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கும் சூழலுக்கு புலிகள் தள்ளப்பட்டனர். பதுங்கு குழிகள் தோண்டும் பணிகளில் பொதுமக்களையும் ஈடுபடுத்தினர். 2008-ல் புலிகளின் படை பலம் கணிசமாகக் குறைந்துவிட்டது. அவர்களின் உண்மையான எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. புலிகள் வலிமையாக இருந்தபோது, 20,000 பேர் அந்த அமைப்பில் இருந்துள்ளனர். ஆனால், இறுதிக் கட்டப் போரில், அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வெறும் 5,000 ஆகிவிட்டது.

புலிகளை மேலும் முடக்கும் வகையில், 'அமைப்புடன் தொடர்புடையவர்கள்’ என சந்தேகிக்கப்பட்ட நபர்​களைக்கூட ராணுவம் சித்ரவதைக்கு உட்படுத்தியது. இதற்காக 'வெள்ளை வேன்’ என்ற ஆபரேஷன் நடத்தப்பட்டது. புலிகளின் ஆதரவாளர்கள் என்று கருதப்பட்டவர்கள், அந்த வேனில் பிடித்துச் செல்லப்பட்டார்கள். அதில் பலர் காணாமலேயே போனார்கள். கொல்லப்​பட்டவர்களின் உடல்கள், ரகசியமாக மறைக்கப்பட்டன. பலர் திரும்பி வராததால், அவர்கள் குறித்து அறிய முடியாத நிலை!

மனித உரிமை ஆர்வலர்கள், செய்தியாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த 'வெள்ளை வேன்’ ஆபரேஷனுக்கு இரையாகினர்.

செய்திகளுக்குக் கடுமையான தடைகளும், நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. செய்தியாளர்கள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. சில பத்திரிகையாளர்களின் பெயர்கள், 'புலிகளின் ஆதரவாளர்கள்’ என்று ராணுவத்தின் இணையத்தளத்தில் பகிரங்கமாகக் குறிப்பிடப்பட்டன.

போர்ச் செய்திகளை வெளியிட கடுமையான நிபந்தனைகள் 2008-ல் விதிக்கப்பட்டன. இதனை மீறிய பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்​களும் மிரட்டப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். போர் முடிந்த பிறகும் இந்த மிரட்டல்கள் வழக்​கத்தில் இருந்தன. அரசை விமர்சித்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க, கொலை செய்யப்​பட்டார். போத்தல ஜெயந்த 'வெள்ளை வேனில்’ தூக்கிச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்குப் பிறகு விடுவிக்கப்​பட்டார். பல செய்தி நிறுவனங்​கள் நொறுக்கப்பட்டன. இது குறித்து அரசு எந்த விசாரணையும் நடத்த​வில்லை.

இறுதிக் கட்டப் போரின்போது, ஐ.நா. தொண்டு நிறுவனத்தினர், கிளி​நொச்சியை விட்டு வெளியேறிச் சென்றனர். உதவிக் குழுக்களின் உணவு விநியோகத்தை ராணுவம் தடுத்தது. தளவாடங்கள் மற்றும் பொருட்​களைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, ராணுவப் பயன்பாட்டுக்காக எடுத்துக்​கொண்டது. அதனால், மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுக்க முடியவில்லை. பசியின் கோரப் பிடியில் சிக்கித் தமிழ் மக்கள் கதறினார்கள்.

இத்தகைய இக்கட்டிலும் உதவிக் குழுவினர் தங்களிடம் இருந்த பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள். ஆனால், அந்த இடத்தில் இருந்து அவர்களால் வெளியேற முடியாத அளவுக்கு இரு தரப்பினரின் தாக்குதல் இருந்தது. இறுதிக் கட்டப் போரில், இலங்கை ராணுவம் அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து கொடூரத் தாக்குதல் நடத்தியது. மருத்துவமனைகளைக்கூட ராணுவம் விட்டுவைக்கவில்லை. காய​மடைந்த விடுதலைப் புலிகள் சிகிச்சை பெறுவதாக நம்பப்பட்ட மருத்துவமனைகள் மீது மீண்டும், மீண்டும் தாக்குதலை நடத்தியது ராணுவம்!.

நன்றி :ஜூனியர் விகடன்

Sunday, December 13, 2009

உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்..!

"உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ...
சமாதியோ... மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது..."

----வி.என்.ஃபிக்னர்

போர் ரசிகன்...

போர் பற்றிய
மிக சமீபத்திய
செய்திக்காகக்
காத்திருக்கிறேன்

என் வான்வெளியில் அல்ல
விமானங்கள் சீறுவது
என் தெருவில் அல்ல
குண்டுகள் விழுவது
நொறுங்கித் தரைமட்டமாவது
என் வீடுமல்ல

அகண்ட இப்பிரபஞ்ஞத்தில்
கவனமாய்க் கறாராய்
வகுக்கப்பட்ட
எல்லைகளினுள்
அபாயங்களுக்குத் தப்பி
அரண் கொண்டிருக்கிறது
என் இருப்பு
என் கோப்பைத் தேநீருடன்
என் இருக்கையில்
ஓய்வாய் அமர்ந்து
தினசரியின் ஒரு வரியை
சாதாரணமாய்க் கடந்து விடுகிறேன்

அவ்வரியில் குண்டடிபட்டு
சில நூறுபேர்
இறந்திருக்கிறார்கள்
எந்த நியாயமுமின்றி
ஒரு குழந்தை தகப்பனையோ
சிசுவொன்று முலையூட்டும் தாயையோ
இழந்துவிட்டிருக்கிறது

யாரோ ஒருவர்
சகோதரனையோ
கணவனையோ
பிள்ளையையோ
இழந்து கதறுகிறார்

நாடகமென போர் நிகழும்
ஊடகங்களின்
அபிமான ரசிகன் நான்

மயக்கும் வண்ணத்திலும்
வாசனையிலும்
பெருகி வழிகின்றன
போர்ச் செய்திகள்

சிதறும் தசையும்
ஒழுகும் ரத்தமும்
இடையறாது ஆர்வமூட்ட
அடுத்த அங்கம் எதுவோயென
ஆவல் கொள்கிறேன்

மரவள்ளிக் கிழங்குகளைத்
தோண்டியெடுப்பது போல்
மண்ணிலிருந்து தன் குழந்தைகளின்
உடல்களைத் தோண்டியெடுக்கிறான்
ஒருவன்

தன் அம்மண மேனியில்
குண்டு சிதறிய காயங்களோடு
அழுதுகொண்டிருக்கிறது
ஒரு குழந்தை

போர்ச்சிதிலங்கள் மீது
விளையாடுகின்றனர்
இன்றைய தினத்துக்குத்
தப்பிவிட்ட சிறுவர்கள்

குண்டுகளை விசிறிச் செல்கிறது விமானம்
புகையெழும்பி மூடுகிறது
தொலைக்காட்சித் திரையை

இன்று கொல்லப்பட்டவர்கள்
எண்ணிக்கையைச் சொல்லி
செய்தி வாசிப்பவன் முடிக்கையில்
என் கடைசி மிடறு
தேநீரை உறிஞ்சுகிறேன்

இனிப்பாயும் இருக்கிறது
ரத்தத்தின் சுவை

(‘பிஷப்புகளின் ராணி’ தொகுப்பிலிருந்து)


இயலாமையின் தொலைவிலிருந்தபடி,
போரால் இன்னலுறும் எம் ஈழத் தமிழ்ச் சோதரர்களுக்கு....

வ‌ன்னிப் ப‌டுகொலைக‌ளுக்குப் பின்ன‌ர் இல‌க்கிய‌த்துக்கான‌ சாத்திய‌ம் இருக்கிற‌தா..?

இப்பொழுது வ‌ன்னியில் ந‌டைபெறும் இன‌ப்ப‌டுகொலையான‌து ஜெர்ம‌னியின் ஆஷ்விட்சுக்கு இணையான‌ ஒரு நிக‌ழ்வாக‌வே தோன்றுகிற‌து.

நாள‌ந்த‌ம் இணைய‌த்த‌ள‌ங்க‌ளின் வாயிலாக‌ செய்திக‌ளைக் க‌ண்டு குற்ற‌ உண‌ர்வுக‌ளால் மூழ்க‌டிக்க‌ப்ப‌டுகிறோம்.இந்த‌ குற்ற‌ உண‌ர்வின் எல்லையாக‌ த‌ற்கொலைக‌ள் இருக்கின்ற‌ன‌.

இதை விவ‌ரிக்க‌ வார்த்தைக‌ளோ,க‌விதையோ வேறு எந்த‌ இல‌க்கிய‌ வ‌டிவ‌மோ ஏன் மொழியே கூட‌ ச‌க்திய‌ற்றுப்போய் விடுகிற‌தாக‌வே உண‌ருகிறேன்.

பேர‌ழிவு இல‌க்கிய‌ம்(Holocaust literature) என்ற‌ வ‌கையில் ஆஷ்விட்சில் சிக்கிய‌ யூத‌ர்க‌ளால் ப‌டைக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌.அவ‌ர்க‌ளாவ‌து இர‌ண்டாவ‌து உல‌க‌ப்போரின் முடிவில் விடுவிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் ஆனால் வ‌ன்னி த‌மிழ‌ர்க‌ளுக்கு விடுத‌லை என்ற‌ ஒன்று சாத்திய‌மா என்ற‌ அச்ச‌ம் ம‌ன‌தில் ப‌ர‌வுகிற‌து

அப்ப‌டியான‌ சாத்திய‌த்துக்கு முன்பே அங்கே யாரேனும் உயிரோடு மிஞ்சுவார்க‌ளோ என்ப‌தே ச‌ந்தேக‌ம் தான்.

வ‌ன்னியில் இற‌ப்ப‌து ம‌னித‌ன் ம‌ட்டும‌ல்ல‌ ம‌னித‌ன் என்ற‌ க‌ருத்தாக்க‌மும் தான்.

புலிகளின் வேட்டை

மானுட வேட்டை போலில்லை
புலிகளின் வேட்டை.
அச்சுறுத்தலின்றி அவை
தூக்குவதில்லை தம் நக ஆயுதங்களை.

புலிகள் அமைதி விரும்புபவை...
தனித்து இருப்பவை...
தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை...
தன் எல்லை தாண்டி வராது
புலிகள் எப்போதும்...
புலிகளுக்கும் உண்டு
எல்லை தாண்டா இறையாண்மை

புலி இனம் அழிந்து வருவதாக
யாரும் சொன்னால்கூட நம்பாதீர்கள்...
காடுகளின் கம்பீரம் புலிகள்.
புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

சிங்கமும் புலியும்
ஒரு வனத்தில் வாழ்வதில்லை.
சிங்கமும் புலியும்
ஒரு போரில் மோதுவதில்லை.
மோதினால்...
புலிதான் வெல்லுமென்கிறது
வனங்களின் வரலாறு.

-தாமிரா

தரமுடியாது உங்களால் எங்கள் ஆத்மாவை.

இந்நிழல் எமதல்ல!
இக் கூடாரங்கள் எமது குடில்கள் அல்ல!
சுற்றி உறுதியாய் கோட்டைப்போல் அமைந்த
மதில் பாதுகாப்பல்ல! பிளவு
காணவும், ஒன்று சேரக் கூடாதென்பதன்
அடையாளமாகயிருக்கும் பிளவு.

முள்வேலிகளையும்
கண்ணிகளையும்
கடந்தபோது யார் யாரைத் தொலைத்தோம்!
யார், யார் யார் யாரை இழந்தோம்!
என்றறியாது
உடல் சிதைந்து, கால் சிதைந்து
ஈனஸ்வரத்தில் துடித்திருந்த எமது மக்களைத்
தாண்டினோம்.

கால் இடறிய இடம் கடல்.

பொங்கிச் சீறும் அலைகளின் நடுவே
சிறுதோணியில் பனி இறங்கும் கடலில் நடுங்கிக்
கொண்டே பயணித்தோம்.
வாழ்தலின் கடைசிமுனையில் நின்றுகொண்டு
வந்து சேர்ந்தோம். இங்கு.

இங்கு தரப்பட்டது இரண்டு தட்டும், டம்ளர்களும்
தரவேண்டியது மேலான ஒன்று.
எங்கள் கிராமத்திலிருந்தது அது.
அதன் சத்தியத்தை நீங்கள் காணமுடியாது.

எமது குடில்
எம்மக்கள் பூத்து வளர்ந்த கோவில். அந்நள்ளிரவில்
ராட்சசர்களைப் போல் உருண்டு வந்த
பீரங்கிகள் எமது குடில்கள் மீது ஏறியிறங்கின.

'அம்மா பயமாயிருக்கு" என்று அலறிய மழலைகளை
கட்டியணைத்தபடி திசையறியாது ஓடிய
எம் மக்களோடு ஓடினோம்.

முரட்டு ஆடை அணிந்தவர்கள் இடைமறித்து எங்கள்
குமரிகளை எங்கே இழுத்துச் சென்றார்கள்.
சேறும் சகதியுமாக கிடந்த பாதையில்
எத்தனை குமரிகள் சின்னாபின்னமாக கிடந்தார்களே!
யாரின் உறவுகள் அவர்கள்

இதுதாமா எமது வாழ்வு?

கொழுந்திட்டு எரியும்போது கண்டோமே!
கிராமத்தின் அழுகையை.
தீ, வளர்த்த தீயில் எமது பயிர்கள், மரங்கள்
வெந்ததே!
எம்மையே இழந்தோமே!

உணர முடிகிறதா உங்களால்!
தரமுடியாது உங்களால் எங்கள்
ஆத்மாவை.

க‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்.

க‌ட‌ல்க‌ளைத் தாண்டி கேட்கிற‌து

வீறிட்ட‌ சிசுக்குர‌ல்,

காப்புடைந்த‌ பெண்ணின் க‌த‌ற‌ல்,

க‌ன‌ன்றெரியும் வீட்டின் குமுற‌ல்,

ச‌ம‌ர‌ச‌ப் பேச்சின் அல‌ங்கார‌ வ‌ளைவுக்குள்

எதிரெதிர் இன‌த்து ம‌க‌னும் ம‌க‌ளும்

முகூர்த்த‌ வேளையில்

சிர‌ச‌றுப‌ட்டு அல‌றிவிழும் ர‌ண‌க‌ள‌ம்

இன‌ம் மொழி ம‌த‌ம் என்று

ஊர்வ‌ல‌ம் எடுத்த‌

மூளையின் தாதுக்க‌ள் மோதி

ச‌ங்க‌ம‌ம் பிற‌ழ்ந்து

சிக்கெடுத்த‌து ஒரு முடிச்சு

முடிச்சு இனி

வேட்டிக்கும் முந்தானைக்கும‌ல்ல‌,

முஷ்டிக்கும் பொறிவில்லுக்கும்

அமைதியின் அனுஷ்டான‌ங்க‌ளும்

ஆர‌வார‌ம் ஒடுங்கி ஸ்த‌ம்பித்த‌ன‌.

க‌ல்லும் உருகி

அலையெடுக்கிற‌து

எரிம‌லைப் பிழ‌ம்பு.

ம‌ரண‌ம் ம‌ட்டுமே என்றான‌ பின்

ம‌ர‌ண‌ம் தான் என்ன‌..?

‍‍‍-----பிர‌மிள்

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்-- தீபச்செல்வன்


வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு
திரும்பிக்கொண்டிருந்த
அம்மாவை அக்கராயனில்
நான் தேடிக்கொண்டிருந்தேன்
ஷெல்களுக்குள்
அம்மா ஐயனார் கோயிலை
விழுந்து கும்பிட்டாள்
ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.

நேற்று நடந்த கடும் சண்டையில்
சிதைந்த கிராமத்தில்
கிடந்தன படைகளின் உடல்கள்
கைப்பற்றப்பட்ட
படைகளின் உடல்களை
கணக்கிட்டு பார்த்தபடி
சிதைந்த உடல்கள்
கிடக்கும் மைதானத்தில்
பதுங்குகுழியிலிருந்து
வெளியில் வந்த
சனங்கள் நிறைகின்றனர்.

பக்கத்து வீட்டில்
போராளியின் மரணத்தில்
எழுகிற அழுகையுடன்
இன்றைக்கு நாலாவது தடவையாக
திடுக்கிட்டு எழும்பிய அம்மா
முறிகண்டி பிள்ளையாரை
கும்பிட்டபடி ஓடுகிறாள்
பூக்களும் மண்ணும்
கைகளில் பெருகுகிறது.

02

போன கிழமை விட்டு வந்த
கிராமம் முழுவதுமாய் சிதைந்து போனது
குசினிக்குப் பக்கத்தில்
கிடந்த பதுங்குகுழியில்
படைகளின் ஏழு சடலங்கள்
மூடுண்டு கிடந்தன.

போராளிகள் கைப்பற்றிய
ஆயுதங்களில் மீட்கப்பட்டிருந்த
கிளைமோர்களைக் கண்டும்
எறிகனைகளைக்கண்டும்
சனங்கள் பெருமூச்செறிந்தனர்.

போர் வாழ்வை அழித்தபொழுது
கிராமங்கள் போர்க்களமாகின
அக்கராயன்குளம் காடுகளில்
ஒளிந்திருக்கும் படைகளிடம்
நாச்சிக்குடா வீதியே அகப்பட்டிருந்தது

03

அகதிகள் வீடாயிருந்த
ஸ்கந்தபுரம் இத்திமரம்மீது எறிகனைகள் வீழ்ந்தன
அகதிக்குடியிருப்புகள் நிறைந்த
மணியங்குளம் கிராமம்
எரிந்து சாம்பலாய்க் கிடந்தது.

நிலத்தில் பதுங்கமுடியாதபொழுது
வெளியில் வந்து விடுகிறேன்
தலைகளில் விழும் எறிகனைகளை
ஏந்தும் பிள்ளைகளை
நினைத்து துடிக்கிற
தாய்மார்கள் வெளியில் நின்றனர்.

செஞ்சிலுவைச்சங்கம்
கொண்டு வந்த போராளியின் உடல்
மேலும் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு சிங்களத்தாய்
துடித்தழுகிறாள்
ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய்
துடித்தழுகிறாள்
சிதைந்த கிராமங்களில்
பரவிக்கிடந்தன
படைகளின் உடல்கள்
மதவாச்சியை கடந்து
படைகள் வரத்தொடங்கியபொழுது
வவுனியாவைக்கடந்து
போராளிகள் போகத்தொடங்கினர்.

தெருமுறிகண்டி மடங்களில்
கிடந்தன ஆள் இல்லாதவர்களின் பயணப்பொதிகள்.

புதுமுறிப்பில் வீழ்ந்த
ஏறிகனைகளில் இறந்த
குழந்தைகள்
வரிச்சீருடைகளை அணிந்த
காட்சிகளை
ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

படைகளை நோக்கிச் சுடுகிற
போராளிகளின் மனங்களில் இருந்தன
பசுமையான கிராமங்களும்
அங்கு நடமாடித் திரிகிற சனங்களும்.

- தீபச்செல்வன் (deebachelvan@gmail.com)

ஒரு (இலங்கை) ராணுவ வீரனின் தொழில் அறம்...!

நீ மனிதனல்ல ராணுவ வீரன்

பயிற்சியளிக்கப் பட்ட மிருகம்..

உனது நினைவில் இருக்க வேண்டியது

உன் பெயர் கூட அல்ல உனது அடையாள எண் மட்டுமே..

கேள்வி கேட்காமல் மேலதிகாரிக்கு கீழ்படிந்து நட..!

ஒரு விசில் சத்தம் அல்லது உத்தரவு வந்தவுடன் சுடு..

தாய்,தந்தை,குழ்ந்தை எதுவாயினும் சுடு

அனைத்தையும் தரை மட்டமாக்கு

எத்தனை தலைகளை கொய்தாய் என்பதை பொறுத்து

உனது தகுதி தீர்மானிக்கப்படும்....

| author: senthilaan

க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே..! நீங்க‌ள் போராட்ட‌த்தை ஆத‌ரிக்காவிடில் சிங்க‌ள‌வ‌னை ஆத‌ரிப்ப‌தாக‌த் தான் அர்த்த‌ம்..!

த‌மிழ‌ர் ப‌ல‌ரும் கொண்டிருக்கிற‌ மூட‌ ந‌ம்பிக்கைக‌ளில் ஒன்றான‌ "த‌மிழினத் த‌லைவ‌ர்" க‌லைஞ‌ர் ஓரு முடிவு எடுப்பார் ஈழ‌த்தில் செத்து ம‌டிகின்ற‌ ந‌ம‌து ச‌கோத‌ர‌ர்க‌ளை காப்பாற்றுவார் என்ற‌ மூட‌ ந‌ம்பிக்கை தான் மிக‌ மோச‌மான‌து.

க‌ருணாநிதிக்கு த‌மிழின‌த் த‌லைவ‌ர் ப‌ட்ட‌த்தை யாருமே கொடுக்க‌வில்லை த‌ன‌க்குத் தானே சூடிக் கொண்ட‌ ப‌ட்ட‌ம் தான் அது ஏனென்றால் "ப‌ட்ட‌ங்க‌ள்" சூடிக்கொள்வ‌தில் அவ‌ருக்கு நிக‌ர் அவ‌ர்தான்.

பிர‌பாக‌ர‌ன் ஜ‌ன‌நாய‌க‌வாதி இல்லை அவ‌ர் ஒரு ச‌ர்வாதிகாரி என்கிறார் ச‌ரி ஜ‌ன‌நாய‌க‌வாதி க‌ருணாநிதியின் ஜ‌ன‌நாய‌க‌ப் ப‌ண்புக‌ளை கொஞ்ச‌ம் ஆராய்வோம்..

1.அறிஞ‌ர் அண்ணாவிற்கு பின் த‌லைவ‌ராக வ‌ந்திருக்க‌ வேண்டிய‌ நெடுஞ்செழிய‌னுக்கு குழி ப‌றித்து சினிமாகார‌ரான‌ எம்.ஜி.ஆருட‌ன் இணைந்து துரோக‌ம் செய்து த‌லைவராக‌ ஆனார்.

2.பின்ன‌ர் தான் த‌லைவ‌ராக‌ வ‌ர‌ உத‌விய‌ எம்.ஜி.ஆர் க‌ண‌க்கு கேட்ட‌தால் அவ‌ரை வெளியேற்றி த‌ன‌து ஜ‌ன‌நாய‌க‌ ப‌ண்பை இரண்டாவ‌தாக‌ நிரூபித்தார்.

3.மிசா கொடுமைக‌ளை அர‌ங்கேற்றிய‌ "ஜ‌ன‌நாய‌க‌வாதி" இந்திராவுட‌ன் கூட்ட‌ணி அமைத்து மீண்டும் நிரூபித்தார்.

4.எந்த‌ த‌குதியும் இல்லாத‌ த‌ன‌து ம‌க‌னுக்கு ப‌த‌வி கொடுத்தும்,எங்கே தன‌து ம‌க‌னின் ம‌குடாபிச‌த்துக்கு போட்டியாக‌ வ‌ந்துவிடுவாரோ என்று வைகோவை வெளியேற்றியும் நிரூபித்தார்.

5.பின்ன‌ர் அழ‌கிரி,த‌யாநிதி,க‌னிமொழி,க‌ய‌ல்விழி என்று த‌ன‌து மொத்த‌ குடும்ப‌த்தையும் க‌ள‌த்தில் இற‌க்கி த‌மிழ்நாட்டையே கூறு போட்டு முழுமையான‌ ஜ‌ன‌நாய‌க‌வாதியாக‌ ப‌ரிண‌மித்துள்ளார்.

ஈழ‌ம்,காவிரி,முல்லை பெரியாறு என்று வ‌ர‌லாற்றின் வ‌ழி நெடுகிலும் இவ‌ருடைய அல‌ட்சிய‌மும், துரோக‌மும் தொட‌ர்ந்து கொண்டிருகிற‌து.

ந‌ம‌து "ஜ‌ன‌நாய‌க‌ அமைப்பே" முட்டாள்த‌ன‌மான‌ ஒன்று என்ப‌தும் அது முதிர்ச்சிய‌ற்ற‌ ந‌ம‌து ம‌க்க‌ளுக்கு முற்றிலும் பொருந்தாது என்ப‌துக்கு சாலைகளின் நடுவே அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ சுவ‌ர்க‌ளே சாட்சி ஏனென்றால் வெண்கோடுக‌ளால் எல்லை தாண்டும் வாக‌ன‌ங்க‌ளை த‌டுக்க‌ முடியாது என்ப‌தால்தானே..?

க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே தி.மு.க‌ வில் நீங்க‌ள் உருவாக்கிய‌ "ஜ‌ன‌நாய‌க‌ம்" சூட‌மேந்திக‌ளையும்,அடிவ‌ருடிக‌ளையும்,துதிபாடிக‌ளையும் உருவாக்கிய‌து தான்.

க‌ருணாநிதிக்க‌ள்,ஜெய‌ல‌லிதாக்க‌ளை(பாசிச‌) உருவாக்கிய‌துதான் ந‌ம‌து "ஜ‌ன‌நாய‌க‌த்தின்" விப‌த்து(சாத‌னை??).

(க‌ட‌ந்த‌ ப‌ல‌ தேர்த‌ல்க‌ளில் நான் தி.மு.க‌ விற்கே வாக்க‌ளித்தேன் குறைந்த‌ தீமை என்ற‌ அடிப்ப‌டையில்)
இறுதியாக‌ ஒரு உறுதியான‌,தீவிர‌மான‌ நிலையெடுத்து போர‌ட்ட‌த்தை ஆத‌ரிக்க‌ முய‌ற்சி செய்யுங்க‌ள்.

அத‌ன் மூல‌மாவ‌து துரோக‌த்தின் வீச்சாவ‌து கொஞ்ச‌ம் குறையும் இல்லையெனில் நீரோ ம‌ன்ன‌னின் வ‌ரிசையில் சேர்க்க‌ப்ப‌டும் நாள் வெகு தொலைவில் இல்லை.


மீண்டும் ஒரு முறை என‌து த‌லைப்பை வாசிக்கிறேன்

"க‌லைஞ‌ர் அவ‌ர்க‌ளே..! நீங்க‌ள் போராட்ட‌த்தை ஆத‌ரிக்காவிடில் சிங்க‌ள‌வ‌னை ஆத‌ரிப்ப‌தாக‌த் தான் அர்த்த‌ம்..!"

நேரம் 6:56 Pm