Showing posts with label நடப்பு. Show all posts
Showing posts with label நடப்பு. Show all posts

Thursday, January 13, 2011

சாப்ட்வேர் என்ஜினீயரை கொண்டாடாத சமூகம் உருப்படாது?

மாபெரும் ஆன்மா ஒன்று மனித குலத்தை மென்பொருள் துறையாகவும் மென்பொருள் அல்லாத துறைகளாவும் பிரிக்குமென்றால் நான் மென்பொருள் துறையோடுதான் இருப்பேன்.

எழுத்தாளனை கொண்டாடாத சமூகம் உருப்படாது என்று எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.எனக்கு தெரிந்த அளவில் மற்ற துறையினர் யாரும் இந்த அளவுக்கு சமூகத்தை குறை சொல்பவர்களாக இல்லை.அதை ஒரு வாதத்திற்கு சரியென்றே வைத்தாலும் ஒரு சமூக அமைப்பில் மற்ற தொழில் செய்பவர்களின் நிலை என்ன என்ற கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை. ஒரு உதாரணத்திற்கு நான் சார்ந்திருக்கிற மென்பொருள் துறையை எடுத்துக்கொள்வோம்.

இந்த சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை மென்பொருள் துறை வழங்கி வருகிறது.அதை வெறும் பொருளியல் தளத்தில் வைத்து மட்டும் அல்ல மற்ற தளங்களில் அதன் பயன்பாட்டை,வீச்சை  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சமூகத்தின் அனைத்து பிரிவினரும் அனுபவித்து வருகிறார்கள்.
இதன் நேரடி பயன்பாடுகள் என்ற அளவில் எல்லா கட்டணங்களும் இன்று online முறைக்கு விட்டார்கள். பயன்பாடுகளை கொஞ்சம் பார்ப்போம்.
  • மின்கட்டணம்
இது தமிழமெங்கும் online  முறைக்கு மாறியதால் எனது ஊரில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்து அங்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பின்னர் கட்டினால் கூட மீதி வரும் தொகையில் சில்லறை சுமார் நான்கு ருபாய் வரை இருந்தால் கூட கிடைக்காது.இவ்வாறு அறவிடும் தொகையில் அந்த ஊழியர் பணி நேரத்திலேயே கம கம வென்று இருப்பார். இந்த தொல்லை இனி அறவே இல்லை. ஆனாலும் இன்னும் பெரும் அளவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுவும் மாறும் என்று நம்புவோம். தமிழக அரசின் மின் கட்டணத்திற்கான இணையத்தளம் இது தான் https://www.tnebnet.org/awp/TNEB/.

தமிழக அரசின் இந்த முயற்சியை பாராட்டுகிற இவ்வேளையில் இதற்க்கு பின்னால் உள்ள கண்ணுக்கு தெரியாத மென்பொருள் துறையினரின் உழைப்பை கொண்டாடாத சமூகம் உருப்படாது :)
  • தொடர் வண்டி பயண முன்பதிவு, வங்கி நடவடிக்கைகள்
தொடர் வண்டி பயண முன்பதிவு, வங்கி நடவடிக்கைகள் என்பன நமது வாழ்வின் ஒரு கொடும் கனவாகத்தான் இருந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக வங்கி ஊழியர்கள் நம்மை நடத்தும் விதம்.(ஏதாவது விபரம் தெரியாமல் சென்று விளக்கம் கேட்டால் போதும்,வேற்று கிரக ஜந்துவைப் பார்ப்பது போல பார்ப்பார்கள்) இன்று அந்த இருண்ட  காலம் முடிவடைந்து விட்டது.இன்று முகவரி மாற்றம் போன்ற தவிர்க்க முடியாதவற்றிற்கு  மட்டுமே அந்த அற்புத "முகங்களை" தரிசனம் செய்யவேண்டியது இருக்கிறது.பல வங்கிகள் paasbook இல் பதிவேற்றுவது என்ற நடைமுறைகளை அறவே ஒழித்து விட்டார்கள். இதற்கும் யார் காரணம் ? மென்பொருள் பொறியாளர்கள் தானே ? ஏன் ஒரு நாளாவது தானியங்கி எந்திரங்களின் முன் யாரவது அவர்களை வணங்கி நன்றி செலுத்தி உள்ளார்களா ?. சிந்திக்க சிந்திக்க இந்த சமூகம் நம்  மீது கொண்டுள்ள நன்றியின்மையும் வஞ்சமும் புலப்படுகிறது. :)

மளிகைக்கடை முதல் மாட மாளிகைகளைக் கட்டும் கட்டிடத்துறை வரை தொலை தொடர்பு முதல் தொ(ல்)லைகாட்சி வரை !
பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை என்று கருவறை முதல் கல்லறை வரை  மென்பொருள் துறையினரின் உழைப்பை இந்த சமூகம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது ஆனால் இதற்காக மென்பொருள் துறைக்கென ஒரு நாளை ஒதுக்கி விழா எடுக்க மனம் இல்லை,மாறாக நமக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும் அவப்பெயர்கள்,அவமானங்கள்,அவமரியாதைகள்தான் ("அ" வில் வேறு வார்த்தைகள் இருந்தாலும் சேர்த்துக்கொள்ளவும்) எத்தனை எத்தனை !!
  • நாங்கள் ( மற்ற துறையினர்) ஒரு ஆண்டு சம்பாதிப்பதை இவர்கள்(மென்பொருள் துறையினர்) ஓரிரண்டு மாதங்களில் சம்பாதிக்கிறார்கள்.(இதற்கு காரணம் பண மதிப்பு, நாங்கள் அல்ல அய்யா)
  • வகை தொகையின்றி செலவு செய்யும் ஊதாரிகள்.(ஏன் மற்ற துறையில் இருப்பவர்கள் யாரும் ஊதாரித்தனமாக செலவு செய்வதில்லையா? ஊதாரித்தனம் என்பது ஒரு குணநலன் என்றுதான் நாம் கேள்வி பட்டிருக்கிறோம்  ஆனால்  அது ஒரு துறை சார்ந்த விடயம் என்று இவர்கள் "கண்டு"பிடித்துள்ளார்கள் (வாழ்க!,தொடர்க!)
  • வீட்டு வாடகை முதல் காய்கறி வரை விலை ஏறுவதற்கு காரணம் நாம் தான் ( ஐயாயிரம் பெறாத வீட்டை பனிரெண்டாயிரம் வாடகை சொல்லும் வீட்டு உரிமையாளர்களின் பேராசையை பற்றி இவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்)
  • விழாக் காலங்களில் பொங்கி வழியும் போக்குவரத்திற்கு காரணமும் நாமே.(தெரியாமல் தான் கேட்கிறேன் வளர்ச்சியைப் பரவலாக்காமல் எல்லாவற்றையும் சென்னை,பெங்களூர்,ஹைதராபாத் என்று பெரு நகரங்களில் எல்லா நிறுவனங்களையும் அமைத்து (குவித்து)விட்டு பின்னர் அதற்கான போக்குவரத்து.அடிப்படைக் கட்டமைப்பு  வசதிகளை உருவாக்காமல் இருப்பது இந்த அரசின் குற்றமா இல்லை அது எம் குற்றமா? (மனோகரா பாணியில் வாசிக்கவும்))
  • இவர்களால் தான் கலாச்சாரம் கெடுகிறது குடித்து விட்டு கூத்தடிக்கிறார்கள்( குடிக்காத,கூத்தடிக்காத மற்ற துறை ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் அய்யா அத்தோடு  இதைப்பற்றி எழுதவதை நிறுத்திவிடுகிறேன்) 
 எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள்  நீங்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று எழுதுவதற்கு கூட ஒரு மென்பொருள் பொறியாளன் வடிவமைத்த வலைப்பூவைத்தான் பயன் படுத்துகிறீர்கள் அவர்களை என்றாவது கொண்டாடி உள்ளீர்களா என்று சிந்தியுங்கள்.

முடிவாக இவ்வளவு ஏச்சு பேச்சுக்களையும் இழி மொழிகளையும்  தாங்கி எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்களாக வருவோம்.
வாழ்க மென்பொருள் துறை!! வளர்க்க அதன் புகழ்!!
மேரா சாப்ட்வேர் மகான் !! என்றே  சொல்லுவோம் !! பெருமிதம்  கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம் !!!
இந்த 2011 ஆம் ஆண்டை மென்பொருள் ஆண்டாக அறிவிக்க வேண்டும் என நடுவண் அரசைக் கோரி நிறைவு செய்கிறேன் :)

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!

Monday, January 10, 2011

ஓட்டுப் பொறுக்கி ஆகியே விட்டார் சீமான்!!

you too seeman?
வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு பரப்புரை செய்யப் போவதாக அறிவித்துள்ளார் சீமான்.இறுதியாக "செந்தமிழன்" சீமான் போயஸ் தோட்டத்தின் காலடியில் சரணடைந்து வீழ்ந்து விட்டார். உனக்கு எதுக்கையா தமிழ் தேசிய அரசியல் எல்லாம் ? வெங்காயம்.
விரைவில் கலைஞரிடம் இருந்து இவ்வாறு அறிக்கை வரலாம்
"தமிழ் தேசியத்துக்கென தயாரிக்கப்பட்ட துவக்கு இன்று ஊழல் அராஜக மாளிகையின் படிக்கட்டில் துருப் பிடித்து கிடக்கிறது"
ஈழத்தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார் தந்தை செல்வா. ஆனால் தமிழ் நாட்டுத்தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போல் தெரிகிறது. அய்யகோ !!!

தொப்பி தொப்பியே (துப்பி துப்பியே) பதில் சொல்லுங்கள்?

பதிவுலகில் திருட்டு டீவீடீ யை ஆதரிக்கும் தேசிய மயக்கம் கொண்ட தொப்பி தொப்பி என்பவரின் சீமானே பதில் சொல்லுங்கள் என்ற பதிவிற்கான எதிர்வினை தான் இது. முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள் நண்பரே.
  1. சீமானைப் பற்றி எழுதுவதற்காக யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள்?
  2. சீமானைப் பற்றி உடன் பிறப்புகள்,பொதுவுடமையாளர்கள் எழுதிய பதிவுகளை இலவச இணைப்பாக தருவது ஏன்? நீங்கள் தி மு கவினரின் கைக்கூலியா ?
  3. இந்திய தேசியம் என்பது என்ன ?
  4. கருநாடகாவில் தமிழர் கன்னடர் ஒற்றுமை கோடி கட்டிப் பறக்கிறதா ? சொல்லவே இல்ல. மொதல்ல கர்நாடகாவுல வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு அப்பறம் சொல்லுங்கய்யா ஒற்றுமையப்பத்தி. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை நிறுத்துக மேலும் கன்னடர் தமிழர் ஒற்றுமை பற்றி அறிய http://churumuri.wordpress.com/2007/05/09/churumuri-poll-who-killed-bangalore/
  5. சென்ற பாராளுமன்ற தேர்தலில் சீமான் பரப்புரை செய்த இடங்களில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியதே அதற்கு உங்கள் கருத்து துப்பல் ?
  6. இந்தி தேசிய மொழி, united states of india என்று வரலாறும் தெரியாமல் புவியியலும் தெரியாமல் உளறுவது ஏன் ? ப்ளாக் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காகவா ?
  7. வட இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை காதலிக்கிறார்கள் என்று உளறுவது ஏன் ? (இந்த விவகாரம் நடந்தது கருநாடக மாநிலம் மங்களூர் மற்றும் கனர பகுதிகள் இதன் உண்மை தன்மை பற்றி வினவில் கட்டுரை வந்ததே (http://www.vinavu.com/2010/02/02/love-jihad/) இணைப்பு ஏன் தரவில்லை வினவில் இருந்து தனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை வசதியாக மறந்து விடுவது என்ன selective amnesia வா ?
  8. எங்களது ஒற்றுமையைப் பதம் பாத்து தான் நீ அரசியல் லாபமும் பணமும் பெறவேண்டும் என நினைத்தால் அதற்கு என் நாட்டைப் பயன் படுத்த அனுமதிக்க மாட்டேன் --துப்பி துப்பி ( பெயர் காரணத்தை பின்பு விளக்குகிறேன் ) என்ன ஒரு தத்துவ முத்து (துப்பல்) பாருங்கள் நம்ம கிட்ட என்ன ஒற்றுமை வாழுதுன்னு கொஞ்சம் விளக்க முடியுமா ? காவிரி, முல்லைப் பெரியாறு இதெல்லாம் இந்தியாவில் தான் இருக்கிறதே அதே இந்தியாவில் இருக்கும் தமிழ் நாட்டிற்கு ஏன் தண்ணீர் வரவில்லை ? இது பற்றி சிந்திக்க உங்கள் தொப்பி போட்ட மண்டயில் மசாலா இல்லையா அல்லது உங்களது மூளைக்கும் சேர்த்து தொப்பி போட்டுக் கொண்டுள்ளீர்களா ?
  9. தமிழனை அங்கே அடிக்கிறான் இங்கே அடிக்கிறான் என்கிறாயே ? ஏன் தமிழன் என்பதற்காகவா அடித்தான் ? இது இவரின் இன்னொரு தத்துவ முத்து-- பின்ன எதுக்கய்யா அடிக்கிறான் ? கொஞ்சம் விளக்க முடியுமா ?
  10. சினிமா என்பதே ஆபாசம் என்று கூறும் அறிவு ஜீவியான நீங்கள் அதை திருட்டு டீவீடீ இல் பார்க்குமாறு வேண்டுவது ஏன் ? அப்படி அந்த ஆபாசக் குப்பைகளை பார்த்தால் மட்டும் எப்படி குடும்பம் முன்னேறும் அது மேலும் மேலும் சீரழிவைக் கொண்டுவந்து தானே நிறுத்தும் ?
  11. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தான் சிறையில் தான் தள்ளப் படுவேன் என்று சீமான் கூறி உள்ளாரே அதைப் பற்றி ஏன் கள்ள மௌனம் ?
  12. அயல் நாட்டில் உள்ள தீவிரவாத கும்பலிடம் பணம் வாங்கி கொண்டு சீமான் பேசுவதாக சொல்லும் நீங்கள் அந்த தீவிரவாத கும்பலின் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா ?
  13. தமிழர்களை இந்தியாவிற்கு எதிராக மாற்றித்தான் சீமான் அரசியல் செய்ய வேண்டுமா ? நல்ல இருக்கு கதை தமிழன் எப்போ எதிரா போனான் அந்த இந்தியா தானே தமிழனுக்கு எதிரா இருக்கு அத தானே சீமான் சொல்கிறார்
  14. உங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பம்மிக் கொண்டு பதிவு வசை பாடுவது ஏன் ?
  15. இறுதியாக "நமது" உறவு பலப்பட என்று ஒரு இணைப்பைக் கொடுத்துள்ளீர்களே அந்த நமது என்பது யார் ? உடன் பிறப்பு கும்பலா ?

இந்த கேள்விகளுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்

இறுதியாக பெயர்க்காரணம் இவர் இந்த நபர் சீமான் மீது வசைமாரி பொழிவதாக நினைத்துக் கொண்டு இவர் மல்லாந்து படுத்துக் கொண்டு துப்பிக் கொண்டிருக்கிறார் எனவே இவரின் பெயர் துப்பி துப்பி என்று குறிப்பிடுகிறேன்

கருத்துக்களை திறந்த மனதோடு வரவேற்கிறேன் !!

Sunday, December 26, 2010

சன் டி.வி "வீர" பாண்டியனின் சண்டித் தனம்

சன் நியூஸ் தொலைக் காட்சியில் நேற்று இரவு ஏதேச்சையாக வீரபாண்டியனின் நேருக்கு நேர் நிகச்சியை காணும் பேறு?? கிடைத்தது.
பேட்டி காணப்பட்டவர் ம.தி.மு.க வில் இருந்து சமீபத்தில் வெளியேறிய (வெளியேற்றப் பட்ட ?) "கலைப் புலி" தாணு (பேட்டி எடுக்கற அளவுக்கு என்னத்த கிழிச்சார்னு தெரியல ) அதில் வீரபாண்டியன் கேட்ட ஒரு கேள்வி ம.தி.மு.கவில் இருந்து தொடர்ந்து எல்லோரும் வெளியேறி வருகிறார்களே ஏன் ? கட்சியில் தனக்கு சமமான அறிவார்ந்தவர்களின் இருப்பு வைகோ விற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறதா ? என்ன ஒரு அயோக்கியத்தனமான கேள்வி இது. வெளியேறியவர்கள் அனைவரும் வைகோ விற்கு சமமான "அறிவாற்றல்" பெற்றவர்களா ? அப்படியானால் அவர்களே தலைவர்களாக இருந்திருக்க வேண்டுமே ? இதையே தி.மு.க வில் இருந்து வெளியேறுகிரவர்களிடமும் கேட்பீர்களா மிஸ்டர் "வீர" பாண்டியன் ? வாங்குன காசுக்கு நல்லா தான்யா கூவர