Saturday, February 19, 2011

நகரத்தில் வாழ்பவர்கள் மட்டுமே மனிதர்கள் facebook அராஜகம்..!

நீங்கள் மனிதர்களாக இருக்க வேண்டுமா facebook இல் கட்டாயம் உறுப்பினராக இருந்தாக வேண்டும் என்ற நிலைக்கு சமூகம் சென்று கொண்டிருக்கிறது. பலர் இதற்க்கு அடிமையாகி விட்டனர்.இன்றைய வாழ்வின் தவிர்க்கவியலாத அளவு சமூக வலைத்தளங்களின் பயன்பாடு இருக்கிறது வெறும் சமூக வலைத்தளம் என்ற அளவில் இருந்து facebook எனும் முகநூல் பன்முக பயன்பாடுகளை கொண்டதாக இருக்கிறது. ஆனால் இந்தத் தளம் தன்னளவில் பன்முகத்தன்மையை மறுக்கிறது அதவாது உங்களது சொந்த ஊர் என்ற இடத்தில் நீங்கள் உங்களது சிற்றூரின் (கிராமத்தின்) பெயரை டைப் செய்ய முடியாது அதில் ஏற்கனவே உள்ளீடு செய்யப் பட்டுள்ள ஒரு பட்டியலில் இருந்தே அதை தெரிவு செய்ய முடியும்.

இந்த இடத்தில் அது home town என்று மட்டுமே இருக்கிறது. நீங்கள் ஒரு சிற்றூரை சேர்ந்தவராக இருந்தால் அதை இதில் குறிப்பிட முடியாது.அதாவது நகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமே மனிதர்கள் என்று சொல்கிறது எனத் தோன்றுகிறது. முக நூலின் இந்த அடையாள மறுப்பையும் பாசிச போக்கையும் கண்டிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.உங்களுக்கு ?

4 comments:

Raja said...

வினவு படிச்சு ரொம்ப கெட்டு போய்ட்ட... :)

பழமைபேசி said...

http://maniyinpakkam.blogspot.com/2011/03/t.html

தம்பி, நீங்க இதையும் ஒருக்கா... இஃகிஃகி!!

பழமைபேசி said...

//இந்த இடத்தில் அது home town என்று மட்டுமே இருக்கிறது. நீங்கள் ஒரு சிற்றூரை சேர்ந்தவராக இருந்தால் //

தம்பி, அது மொழியின் குறைபாடு.... ஊர் என்பதற்கு இணையான சொல் ஆங்கிலத்தில் இல்லை... village/ville என்பது அவர்களுடைய புழக்கத்தில் இல்லவே இல்லை.... அது அவர்களுக்கு திசைச்சொல்!!

மாங்கனி, மாங்காய்,மாம்பிஞ்சு -- ஆங்கிலத்தில் கூற இயலுமா?? அது போலத்தான்!!

சீனு said...

//வினவு படிச்சு ரொம்ப கெட்டு போய்ட்ட... :)//

:))

Post a Comment