Tuesday, February 8, 2011

அ.தி.மு.க வில் சேர்ந்தார் வைகோ ?

திரு வைகோ அவர்கள் நாகையில் உண்ணா நிலை போராட்டம் நடத்திய போது மேடையில் கீழ் காணும் படம் வைக்கப்பட்டுள்ளது
அதாவது பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதாவிற்கு அடுத்து வைகோ
இந்தப் படம் சொல்லும் சேதி என்ன திரு வைகோ அவர்களே ? முழு சரணாகதிக்கு தயார் ஆகிவிட்டீர்கள் என்பது புலனாகிறது. இதற்கு பேசாமால் கட்சியை கலைத்து விட்டு அ.தி.மு. க விலேயே சேர்ந்து விடலாம். இதெல்லாம் ஒரு பிழைப்பா ? உங்களை நம்பி இருக்கும் கொஞ்ச நஞ்சம் தொண்டர்களையும் முட்டாளாக்காமல் ஆவது இருங்கள் புரட்(டு)சி புயல் அவர்களே..!


6 comments:

ரவி said...

அதிமுகவை வைகோ கைப்பற்றுவாரா ?

பழமைபேசி said...

தம்பி, அவிங்க ரெண்டு பேர்த்தையுமே(சீ, வை) சுத்தி சுத்தி வர்றீகளே?

செந்திலான் said...

வருகைக்கு நன்றி திரு ரவி. நான் உங்கள் பதிவுகளின் தீவிர ரசிகன்.உங்களின் எள்ளலுக்கும் தான்
வைகோவால் கைப்பற்ற முடியாது என்றுதான் நினைக்கறேன் ஏன்னா age difference வைகோ ஜெயலலிதாவை விட சீனியர் ஆனா வைகோ ஜெ வை விட உடல் நலத்துடன் இருக்கிறார் பார்ப்போம் என்ன ஆகுமென்று. உங்களின் தகர நெடுங்குழைகாதன் அருள் யாருக்கு என்று சொல்லுங்கள்
பழமை அண்ணே! என்ன பண்றது இவங்க ரெண்டு பேத்தையும் ரொம்ப நம்பினேன் ஆனா ஏமாந்தது தான் மிச்சம்.

ஞாஞளஙலாழன் said...

என்னத்த சொல்ல? இந்த அரசியல்வாதிகளே இப்படிதான்.

Anonymous said...

சேர்ந்தால் தான் என்ன சார் ! விஜயகாந்து எல்லாம் அரசியல் வாதி ஆகும் போது. ஒரு அரசியல் வாதி சந்தர்ப்பவாதி ஆகக் கூடாது.

பூங்குழலி said...

கலைஞருக்கு பின்னால் தான் தான் தி முக விற்கு என்ற நினைப்பில் இருந்தார் .அது பொய்த்த போது வெளியேறினால் இன்னொரு எம் ஜி ஆர் ஆகலாம் என்று நினைத்தார் .அதுவும் பொய்யான போது அதிமுகவை பிடித்துக் கொள்ளலாமென்ற கனவில் இருக்கிறாரோ என்னவோ ?

Post a Comment