Monday, January 10, 2011

இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் செம்மொழிப் பட்டியலில் தமிழ் இல்லை

இன்பி நாராயண மூர்த்தி அவர்கள் செம்மொழிகளில் இருந்து படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்காக சுமார் இருபது கோடி ரூபாய் வரை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். மொழி பெயர்க்கப் படும் நூல்கள் பின்னர் "The murthy's Classical Library" என்ற பெயரில் இந்தியாவில் நூலகமாக வைக்கப் படும். சரி அவர் பட்டியலில் என்ன என்ன மொழிகள் இருக்கிறது (தமிழும் இருக்கும் என்று நப்பாசையோடு) என்று ஆர்வத்தோடு பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது

அந்த பட்டியல்


  • சமற்கிருதம்

  • பாரசீகம்

  • உருது.

என்ன மாதிரியான தயக்கம் என்று புரியவில்லை.

பாரசீகத்தை விடவா தமிழ் முக்கியத்துவம் இல்லாத மொழி ?

ஒருவேளை மொழிபெயர்க்கப் படும் அளவுக்கு தமிழில் இலக்கியங்களே இல்லை என்று கருதுகிறார்களோ என்று ஐயமாக இருக்கிறது.

ஓட்டுப் பொறுக்கி ஆகியே விட்டார் சீமான்!!

you too seeman?
வரும் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு பரப்புரை செய்யப் போவதாக அறிவித்துள்ளார் சீமான்.இறுதியாக "செந்தமிழன்" சீமான் போயஸ் தோட்டத்தின் காலடியில் சரணடைந்து வீழ்ந்து விட்டார். உனக்கு எதுக்கையா தமிழ் தேசிய அரசியல் எல்லாம் ? வெங்காயம்.
விரைவில் கலைஞரிடம் இருந்து இவ்வாறு அறிக்கை வரலாம்
"தமிழ் தேசியத்துக்கென தயாரிக்கப்பட்ட துவக்கு இன்று ஊழல் அராஜக மாளிகையின் படிக்கட்டில் துருப் பிடித்து கிடக்கிறது"
ஈழத்தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார் தந்தை செல்வா. ஆனால் தமிழ் நாட்டுத்தமிழனை கடவுளாலும் காப்பாற்ற முடியாது போல் தெரிகிறது. அய்யகோ !!!

தொப்பி தொப்பியே (துப்பி துப்பியே) பதில் சொல்லுங்கள்?

பதிவுலகில் திருட்டு டீவீடீ யை ஆதரிக்கும் தேசிய மயக்கம் கொண்ட தொப்பி தொப்பி என்பவரின் சீமானே பதில் சொல்லுங்கள் என்ற பதிவிற்கான எதிர்வினை தான் இது. முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள் நண்பரே.
  1. சீமானைப் பற்றி எழுதுவதற்காக யாரிடம் எவ்வளவு வாங்கினீர்கள்?
  2. சீமானைப் பற்றி உடன் பிறப்புகள்,பொதுவுடமையாளர்கள் எழுதிய பதிவுகளை இலவச இணைப்பாக தருவது ஏன்? நீங்கள் தி மு கவினரின் கைக்கூலியா ?
  3. இந்திய தேசியம் என்பது என்ன ?
  4. கருநாடகாவில் தமிழர் கன்னடர் ஒற்றுமை கோடி கட்டிப் பறக்கிறதா ? சொல்லவே இல்ல. மொதல்ல கர்நாடகாவுல வந்து கொஞ்ச நாள் இருந்துட்டு அப்பறம் சொல்லுங்கய்யா ஒற்றுமையப்பத்தி. குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை நிறுத்துக மேலும் கன்னடர் தமிழர் ஒற்றுமை பற்றி அறிய http://churumuri.wordpress.com/2007/05/09/churumuri-poll-who-killed-bangalore/
  5. சென்ற பாராளுமன்ற தேர்தலில் சீமான் பரப்புரை செய்த இடங்களில் காங்கிரஸ் மண்ணைக் கவ்வியதே அதற்கு உங்கள் கருத்து துப்பல் ?
  6. இந்தி தேசிய மொழி, united states of india என்று வரலாறும் தெரியாமல் புவியியலும் தெரியாமல் உளறுவது ஏன் ? ப்ளாக் இலவசமாக கிடைக்கிறது என்பதற்காகவா ?
  7. வட இந்தியாவில் முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை காதலிக்கிறார்கள் என்று உளறுவது ஏன் ? (இந்த விவகாரம் நடந்தது கருநாடக மாநிலம் மங்களூர் மற்றும் கனர பகுதிகள் இதன் உண்மை தன்மை பற்றி வினவில் கட்டுரை வந்ததே (http://www.vinavu.com/2010/02/02/love-jihad/) இணைப்பு ஏன் தரவில்லை வினவில் இருந்து தனக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை வசதியாக மறந்து விடுவது என்ன selective amnesia வா ?
  8. எங்களது ஒற்றுமையைப் பதம் பாத்து தான் நீ அரசியல் லாபமும் பணமும் பெறவேண்டும் என நினைத்தால் அதற்கு என் நாட்டைப் பயன் படுத்த அனுமதிக்க மாட்டேன் --துப்பி துப்பி ( பெயர் காரணத்தை பின்பு விளக்குகிறேன் ) என்ன ஒரு தத்துவ முத்து (துப்பல்) பாருங்கள் நம்ம கிட்ட என்ன ஒற்றுமை வாழுதுன்னு கொஞ்சம் விளக்க முடியுமா ? காவிரி, முல்லைப் பெரியாறு இதெல்லாம் இந்தியாவில் தான் இருக்கிறதே அதே இந்தியாவில் இருக்கும் தமிழ் நாட்டிற்கு ஏன் தண்ணீர் வரவில்லை ? இது பற்றி சிந்திக்க உங்கள் தொப்பி போட்ட மண்டயில் மசாலா இல்லையா அல்லது உங்களது மூளைக்கும் சேர்த்து தொப்பி போட்டுக் கொண்டுள்ளீர்களா ?
  9. தமிழனை அங்கே அடிக்கிறான் இங்கே அடிக்கிறான் என்கிறாயே ? ஏன் தமிழன் என்பதற்காகவா அடித்தான் ? இது இவரின் இன்னொரு தத்துவ முத்து-- பின்ன எதுக்கய்யா அடிக்கிறான் ? கொஞ்சம் விளக்க முடியுமா ?
  10. சினிமா என்பதே ஆபாசம் என்று கூறும் அறிவு ஜீவியான நீங்கள் அதை திருட்டு டீவீடீ இல் பார்க்குமாறு வேண்டுவது ஏன் ? அப்படி அந்த ஆபாசக் குப்பைகளை பார்த்தால் மட்டும் எப்படி குடும்பம் முன்னேறும் அது மேலும் மேலும் சீரழிவைக் கொண்டுவந்து தானே நிறுத்தும் ?
  11. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தான் சிறையில் தான் தள்ளப் படுவேன் என்று சீமான் கூறி உள்ளாரே அதைப் பற்றி ஏன் கள்ள மௌனம் ?
  12. அயல் நாட்டில் உள்ள தீவிரவாத கும்பலிடம் பணம் வாங்கி கொண்டு சீமான் பேசுவதாக சொல்லும் நீங்கள் அந்த தீவிரவாத கும்பலின் பெயர் என்ன என்று சொல்ல முடியுமா ?
  13. தமிழர்களை இந்தியாவிற்கு எதிராக மாற்றித்தான் சீமான் அரசியல் செய்ய வேண்டுமா ? நல்ல இருக்கு கதை தமிழன் எப்போ எதிரா போனான் அந்த இந்தியா தானே தமிழனுக்கு எதிரா இருக்கு அத தானே சீமான் சொல்கிறார்
  14. உங்களது அடையாளத்தை மறைத்துக் கொண்டு பம்மிக் கொண்டு பதிவு வசை பாடுவது ஏன் ?
  15. இறுதியாக "நமது" உறவு பலப்பட என்று ஒரு இணைப்பைக் கொடுத்துள்ளீர்களே அந்த நமது என்பது யார் ? உடன் பிறப்பு கும்பலா ?

இந்த கேள்விகளுக்கும் கொஞ்சம் பதில் சொல்லுங்களேன்

இறுதியாக பெயர்க்காரணம் இவர் இந்த நபர் சீமான் மீது வசைமாரி பொழிவதாக நினைத்துக் கொண்டு இவர் மல்லாந்து படுத்துக் கொண்டு துப்பிக் கொண்டிருக்கிறார் எனவே இவரின் பெயர் துப்பி துப்பி என்று குறிப்பிடுகிறேன்

கருத்துக்களை திறந்த மனதோடு வரவேற்கிறேன் !!