Sunday, December 13, 2009

க‌ட‌ல் ந‌டுவே ஒரு க‌ள‌ம்.

க‌ட‌ல்க‌ளைத் தாண்டி கேட்கிற‌து

வீறிட்ட‌ சிசுக்குர‌ல்,

காப்புடைந்த‌ பெண்ணின் க‌த‌ற‌ல்,

க‌ன‌ன்றெரியும் வீட்டின் குமுற‌ல்,

ச‌ம‌ர‌ச‌ப் பேச்சின் அல‌ங்கார‌ வ‌ளைவுக்குள்

எதிரெதிர் இன‌த்து ம‌க‌னும் ம‌க‌ளும்

முகூர்த்த‌ வேளையில்

சிர‌ச‌றுப‌ட்டு அல‌றிவிழும் ர‌ண‌க‌ள‌ம்

இன‌ம் மொழி ம‌த‌ம் என்று

ஊர்வ‌ல‌ம் எடுத்த‌

மூளையின் தாதுக்க‌ள் மோதி

ச‌ங்க‌ம‌ம் பிற‌ழ்ந்து

சிக்கெடுத்த‌து ஒரு முடிச்சு

முடிச்சு இனி

வேட்டிக்கும் முந்தானைக்கும‌ல்ல‌,

முஷ்டிக்கும் பொறிவில்லுக்கும்

அமைதியின் அனுஷ்டான‌ங்க‌ளும்

ஆர‌வார‌ம் ஒடுங்கி ஸ்த‌ம்பித்த‌ன‌.

க‌ல்லும் உருகி

அலையெடுக்கிற‌து

எரிம‌லைப் பிழ‌ம்பு.

ம‌ரண‌ம் ம‌ட்டுமே என்றான‌ பின்

ம‌ர‌ண‌ம் தான் என்ன‌..?

‍‍‍-----பிர‌மிள்

No comments:

Post a Comment