இப்பொழுது வன்னியில் நடைபெறும் இனப்படுகொலையானது ஜெர்மனியின் ஆஷ்விட்சுக்கு இணையான ஒரு நிகழ்வாகவே தோன்றுகிறது.
நாளந்தம் இணையத்தளங்களின் வாயிலாக செய்திகளைக் கண்டு குற்ற உணர்வுகளால் மூழ்கடிக்கப்படுகிறோம்.இந்த குற்ற உணர்வின் எல்லையாக தற்கொலைகள் இருக்கின்றன.
இதை விவரிக்க வார்த்தைகளோ,கவிதையோ வேறு எந்த இலக்கிய வடிவமோ ஏன் மொழியே கூட சக்தியற்றுப்போய் விடுகிறதாகவே உணருகிறேன்.
பேரழிவு இலக்கியம்(Holocaust literature) என்ற வகையில் ஆஷ்விட்சில் சிக்கிய யூதர்களால் படைக்கப் பட்டிருக்கின்றன.அவர்களாவது இரண்டாவது உலகப்போரின் முடிவில் விடுவிக்கப்பட்டார்கள் ஆனால் வன்னி தமிழர்களுக்கு விடுதலை என்ற ஒன்று சாத்தியமா என்ற அச்சம் மனதில் பரவுகிறது
அப்படியான சாத்தியத்துக்கு முன்பே அங்கே யாரேனும் உயிரோடு மிஞ்சுவார்களோ என்பதே சந்தேகம் தான்.
வன்னியில் இறப்பது மனிதன் மட்டுமல்ல மனிதன் என்ற கருத்தாக்கமும் தான்.
No comments:
Post a Comment