Sunday, December 13, 2009

புலிகளின் வேட்டை

மானுட வேட்டை போலில்லை
புலிகளின் வேட்டை.
அச்சுறுத்தலின்றி அவை
தூக்குவதில்லை தம் நக ஆயுதங்களை.

புலிகள் அமைதி விரும்புபவை...
தனித்து இருப்பவை...
தனக்கென எல்லைகள் வகுத்துக் கொள்பவை...
தன் எல்லை தாண்டி வராது
புலிகள் எப்போதும்...
புலிகளுக்கும் உண்டு
எல்லை தாண்டா இறையாண்மை

புலி இனம் அழிந்து வருவதாக
யாரும் சொன்னால்கூட நம்பாதீர்கள்...
காடுகளின் கம்பீரம் புலிகள்.
புலிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை.

சிங்கமும் புலியும்
ஒரு வனத்தில் வாழ்வதில்லை.
சிங்கமும் புலியும்
ஒரு போரில் மோதுவதில்லை.
மோதினால்...
புலிதான் வெல்லுமென்கிறது
வனங்களின் வரலாறு.

-தாமிரா

No comments:

Post a Comment