Sunday, December 13, 2009

ஒரு (இலங்கை) ராணுவ வீரனின் தொழில் அறம்...!

நீ மனிதனல்ல ராணுவ வீரன்

பயிற்சியளிக்கப் பட்ட மிருகம்..

உனது நினைவில் இருக்க வேண்டியது

உன் பெயர் கூட அல்ல உனது அடையாள எண் மட்டுமே..

கேள்வி கேட்காமல் மேலதிகாரிக்கு கீழ்படிந்து நட..!

ஒரு விசில் சத்தம் அல்லது உத்தரவு வந்தவுடன் சுடு..

தாய்,தந்தை,குழ்ந்தை எதுவாயினும் சுடு

அனைத்தையும் தரை மட்டமாக்கு

எத்தனை தலைகளை கொய்தாய் என்பதை பொறுத்து

உனது தகுதி தீர்மானிக்கப்படும்....

| author: senthilaan

No comments:

Post a Comment