Thursday, December 10, 2009

வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு..

கூரையின்
முகத்தில் அறையும்
மழையைப் பற்றிய
எந்தக் கவலைகளும் அற்றது
புது வீடு
இலைகளை உதிர்த்தும்
காற்றைப் பற்றியும்
இரவில் எங்கோ காடுகளில்
அலறும் துர்ப்பறவையின்
பாடலைப் பற்றியும்
எந்தக்கவலைகளும்
கிடையாது
புது வீட்டில்..
ஆனாலும் என்ன
புது வீட்டின்
பெரிய ஜன்னல்களூடே நுழையும்
நிலவிடம் துளியும் அழகில்லை..

---- அகிலன்

No comments:

Post a Comment