Sunday, December 13, 2009

உணர்வுகள்....

பகிர்ந்து கொள்ளப்படாத ஒரு மென் உணர்வு
என்னுள்ளே சில நாள்கள் ஒளிந்து கிடக்கிறது.
சிறுகச் சிறுக அது என்னைத் தின்று களிக்கையில்
பூக்களும் புன்சிரிப்புமாக ஒருவன் கடந்து போனான்
வெட்கமின்றி அவனைப் பார்த்து மெல்லச் சிரித்தபோது
மூடுபனி போல் அவன் பட்டும் படாமல் படர்ந்துவிட்டு
பின், நொடிப் பொழுதில் மறைந்துவிட்டான்!
தவிப்பைத் தாண்டிய வலியில்
உறைந்தே போனது எனதழைப்பின் ஆரம்பங்கள்!

--உமா ஷக்தி

umashakthi.blogspot.com

No comments:

Post a Comment