Sunday, December 13, 2009

மஞ்சள் நிறமடையும் பொலிவிய நாட்குறிப்பு

மஞ்சள் நிறமடையும் பொலிவிய நாட்குறிப்பு

என்னிடமிருக்கிற
பொலிவிய நாட்குறிப்புகள் பிரதி
மிகவும் பழசானது தான்

நாளுக்கு நாள்
அதன் பக்கங்கள் மஞ்சளாகிக் கொண்டிருப்பதை
நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
சொல்லித் தரப்பட்ட மௌனத்துடன்

எல்லா சிவப்புக் கனவுகளும்
இப்படியாக,
இப்படியாகவேதான்,
ஆமாம், இப்படியான மௌனத்துடன் தான்
நிறமிழந்து -அழிந்து- இல்லாது போயிற்று

சே
ஒக்டோபர் ஏழாம் தேதி*
இப்படியெழுதியிருந்தார்;
At 2 we rested
as it was now useless try
to advance.
____________________
• சே குவேரா சுட்டுக் கொல்லப்பட்ட தினம்

Thanks to muranveli-Hariharan

No comments:

Post a Comment