Sunday, December 13, 2009

மெய் வருத்தம்

வெப்பம் வேண்டித் தவிக்கும்
அதிகாலை மலரின் ஆவலில்
சுண்டக் காய்ச்சிய முத்தமிட்டு
வலிவடிய உரையாட நினைப்பதுண்டு
உன் ஆசையும் எதிர்ப்பார்ப்பும்
இதுவாகத்தான் இருக்கக் கூடும்
என்ன செய்ய
உன்னில் கரைந்த
மிகு இன்பத்தின் அயர்ச்சியில்
கண்ணசந்து விடுகிறேன்.

--ந. பெரியசாமி
thanks
to http://www.keetru.com/thakkai/aug08/periyasamy.php

No comments:

Post a Comment