Sunday, December 13, 2009

வாழ்க்கைக் கண்ணாடியில்

வாழ்க்கைக் கண்ணாடியில்/
முகம் பார்த்து/
தலை சீவி/ பவுடர் பூசி/
வெளிக் கிளம்பினேன்/

பஸ் ஸ்டாண்டில்/
என்னைப் போலவே/
ஆண்களும் பெண்களும்/

அவரவர் வாழ்க் கைக் கண்ணாடியில்/
முகம் பார்த்து/ அலங்கரித்து/
காத்து நின்றிருந்தனர்/

வந்து போய்க்கொண்டிருந்த/
வாகனங்களில்/ பொதுமக்கள்/
வேற்றுமை காண இயலாவண்ணம்/

உட்கார்ந்து கொண்டும்/
நகர்ந்துகொண்டும்/
பயணம் செய்துகொண்டிருந்தனர்/

என்னுடைய வாகனம் வந்துவிட்டது/
இடிபாடுகளுக்கிடையே/ நானும்/
ஒரு கம்பியில் தொற்றிக்கொண்டேன்/

எங்கோ ஒரு இடத்தில்/
நிலம் தகர்ந்து/ கடல் கொந்தளித்தது/
ஒரு பூ கீழே தவழ்ந்தது.

---ஆத்மாநாம்

No comments:

Post a Comment