Sunday, December 13, 2009

காத்திருப்பு

ஓட்டமும் நடையுமாக
வந்து சேர்ந்த என்னைப் பார்த்து
ஒரு புன்னகையை உதிர்ப்பாய்...
காத்திருந்த களைப்பெல்லாம்
காணாமல் போயிருக்கும் உனக்கு...
கோபப்படுவாய் என நான்
யோசித்து வைத்திருந்த
பொய்க் காரணங்களை
தவிடுபொடியாக்கிவிடும்
உன் அன்பின் பிடி...
உனக்குள் சிரித்தபடி
அன்றைய இரவில்
நீ எழுதப்போகும் கவிதை
இப்படித்தானே தொடங்கும்?
`நம்மைச் சேர்த்த நொடியை
உறைய வைக்க
மந்திரக் கோல் ஒன்று வேண்டும்...

---உமா ஷக்தி

No comments:

Post a Comment