Sunday, December 13, 2009

என்னையும் என்னுள் கவிதையையும் தேடாதீர்கள்

சிந்தைக்கும்
காட்சிகளுக்கும்
முரன்பாடென்பதால்
கனவுகள்
தள்ளியே
நிற்கின்றது

தனிமையின்
பசிக்குள்
இரவுகள்
விழுங்கப்பட
தூக்கம்
தொலைத்ததை
தேட
நினைக்கையில்
விடிகிறது
காலை

நீழும்
வாழ்வின்
தொடர்கதைகள்
கற்பனையைத்
தின்று
உயிர்வாழ்கிறது

நாளை
எப்படி
இருக்கப்போகிறது
என்பதை
இன்று
தேடுவதிலேயே
இன்று
எப்படி
இருந்ததென்பது
மறந்துபோகிறது

சந்தித்து
சலித்துவிட்ட
வாழ்வுடன்
நட்புக்களும்
.
.
இருத்தலின்
பிடிப்பை
இழந்துவிட்ட
இருப்பு.
.
இன்றும்
கவிதைக்குள்
என்னையும்
என்னுள்
கவிதையையும்
தேடாதீர்கள்
...

No comments:

Post a Comment