Sunday, December 13, 2009

குட்டி இளவரசி வந்துவிட்டாள்..!!

டப்பியின் களிப்புகளைப் பரப்பி வைப்பாள்/

சுவற்று அழுக்கை ஈயெனப் பிடிப்பாள்/

கூக்கூவைத் தினம்தினமும் புதிதாய்க் காண்பாள்/

மக்கள் கூட்டத்தில் கூக்குரலிடுவாள்/

ஏறி இறங்கும் படிகள் அவள் உலகம்/

பார்த்தவரெல்லாம் அவளது தோழர்கள்/

பசி உடல் தவிர அழ ஒன்றும் இல்லை/

தனக்குள்தானே பொங்கும் மகிழ்ச்சி அவள்/

ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியின் தொடர்ச்சியே/

பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்ப்பாள்/

அவள் ஊடுருவல் பார்வை உம்மையும் மீறிச் செல்லும்.

---ஆத்மநாம்

வளர்ந்தவர்களான நமக்குக் குழந்தையாகிற ஏக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்குக் குழந்தைகளின் உலகைக் கவனித்த கவிதை இது. நாமும் குழந்தையாக இருந்தபோது இப்படித்தானே இருந்திருப்போம். சொல்லோடுதான் இப்போதைய குழப்பங்களும் துயரங்களும் நம்மிடம் வந்தனவா?

No comments:

Post a Comment