Sunday, December 13, 2009

கடவுளின் கண்களாய்..

ஒரு தக்கையைப் போல்

அந்தச் சொல்

மிதந்து கொண்டிருந்தது

முடிவுகளற்ற பெருவெளியில்

இருபுறம் புரண்டோடும்

இருள்வெளியில்

கடவுளின் கண்களாய்

மிதந்து கொண்டிருந்தது

அலச்சல் கொண்ட புத்தியுடன்,

ஒங்கிக் கொள்ள இயலாமல்

பயண விளிம்புகளில்

ஆவேசமாய் உரசியபடி

அந்தச் சொல்

ஒரு தக்கையப்போல்

மிதந் கொண்டிருந்த

அர்த்தம் எனும் ராட்சத மீன்

பெரும்பசியுடன் விழுங்கும்வரை.

--ஜனமித்திரன்

No comments:

Post a Comment