Sunday, December 13, 2009

விடை பெறுகிறேன் ---வைக்கம் முஹம்மது பஷீர்

அழகான இந்தப் புவியில் எனக்கு அனுமதித்திருந்த நேரம் முழுவதும் முடிந்து விட்டது.என்னிடம் நேரம் சிறிது கூட இல்லை.அல்லாவின் கஜானாவில் மட்டுமே நேரம் இருக்கிறது.ஆமாம் ஒரு போதும் முடிவில்லாத நேரம் முடிவற்ற முடிவில்லாத நேரம்.
மரணம் என்னை பயப்படுத்துவதும் இல்லை பயப்படுத்தாமல் இருந்ததும் இல்லை.மரணம் ஒதுக்கி விட முடியாத ஒன்றல்லவா?அது வரும் போது வரட்டுமே பிறந்தது முதலே கொஞ்சம் அதிகமான தடவைகள் மரணத்தை தொட்டு விட்டு வந்தவன் நான்.ஒரு முறை என் இடது காலில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டது.அடுத்த முறை வலது காலின் பாதத்தின் வழியாக ஒரு பெரிய விரியன் பாம்பு மெல்ல மிக மெல்ல ஊர்ந்து சென்றது.இன்னொரு முறை எங்கள் வீட்டில் மூன்று நான்கு தடவைகள் விரியன் பாம்பு நுழைந்தது.அதுவும் இரவில் கடைசி முறை நான்கு விரல்கள் இடை வெளியில்தான் மரணத்தோடு இருந்தேன்.மிதித்தும் இருப்பேன்.
நான் இப்போது மரணித்து விட்டேன்.இனிமேல் யாராது என்னை நினைப்பர்களா?என்னை யாரும் நினைக்க வேண்டாம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது எதற்காக நினைக்க வேண்டும்.கோடான கோடி அனந்த கோடி ஆண்களும் பெண்களும் இது வரையில் இறந்திருபபர்கள் அல்லவா!அவர்கள் எல்லோரையும் நாம் நினைக்கிறோமா?
அப்புறம் என்னுடைய புத்தகங்கள் அவை எல்லாம் எவளவு காலத்துக்கு நிலைத்து நிற்கும்?புது உலகம் வந்தால் பழமை எல்லாம் புதுமையில் மறைய வேண்டியதுதானே?இங்கே என்னுடையது என்று கூறுவதற்கு என்ன எஞ்சி இருக்கிறது.எனக்கென ஒரு மண் துகளளவு அறிவையாவது நான் இந்த பூமிக்கு கொடையாக அளித்துள்ளேனோ? எழுத்துக்கள் வார்த்தைகள் எண்ணங்கள் இவை எல்லாவற்றையும் கோடான கோடி மனிதர்கள் பயன் படுத்தியவைதானே!
வைக்கம் முகம்மது பஷீர் மரணித்தால் செய்தி வருகிறது எப்படி செத்தார்? அப்போது ஒரு காரணம் வேணும் அவளவுதான்.இப்போது இதோ நான் இறந்து விட்டிருக்கிறேன்.போதுமான காரணங்கள் உண்டா?என்று நீங்கள்தான் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் நான் தான் முன்பே சொன்னேனே என் பக்கத்தில் முடிவில்லாத நேரம் சிறிதுமில்லை எல்லோருக்கும் சலாம் மாங்கோஸ்டைன் மரத்துக்கும் அனைத்து வகையான உயிர்களுக்கும் சலாம்.ஏதாவது தவறு செய்திருந்தேனேயானால் அண்ட பிரபஞ்சமே மன்னியுங்கள் எல்லோருக்கும் மங்களம்."

No comments:

Post a Comment