Sunday, December 13, 2009

படகில்
நீரில் அலையும் ஈரக்கால்கள்

பசியால் மங்கும் முகங்கள்

அவளுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலாக
என் இதயம்

அவள் கண்களிலிருந்தும்

அவள் கைகளிலிருந்தும்

என்னைப் பிரித்தது எது

துயரத்தை கண்ணீர் மறைக்க

பெய்யும் மழைக்கும்

ஜன்னலுக்கும் அப்பால்

அவள் நிற்கிறாள்

'இரு, நானும் உன்னுடன் வருகிறேன்' என்று
சொல்ல முடியாமல்.
----ஓட்டிரோ சில்வா
வெனிசூலாவை சேர்ந்த இடதுசாரிக் கவிஞர்

No comments:

Post a Comment