Sunday, December 13, 2009

கடற்பறவையின் தொழுகை

ஒவ்வொரு சமாதியின்

தலைமாட்டிலும் காலடியிலும்

கொப்பும் துளிரும் விட்ட

மஞ்சனாத்திமரங்கள்

இறப்பின் தருணங்களிலிருந்து

உயிர்ப்பிக்க எத்தனிக்கும்

காலம் மறநத சொல் ஒன்றை

தேடிக் கொண்டிருக்க

இலைகளில் படர்ந்த

வெற்று மெளனம் கலையத் துவங்குகிறது.

வராத தேவதை ஒன்றிற்காக

யாருமற்ற மணல் வெளியில் நின்று

நிரம்பவும் யாசித்து

கலுங்குப்பள்ளியின்

மினரா உச்சியில்

ஒளிநிரப்பிக் கொண்டிருந்த சுடர்

அலைகளின் நிழலில்

நீக்கமறக் கலந்து

பொழுதெல்லாம் காத்திருக்கிறது

கடலில் மிகவும் நீளமான பாய்விரித்து

திசையற்ற தொழுகையை

முடிக்க இயலாமல் கடற்பறவை

--ஹெச்.ஜி.ரசூல்

No comments:

Post a Comment